செய்திகள் :

திருவாரூர்: சட்டவிரோதமாக மது விற்பனை; தொடர்பில் இருந்த 3 போலீஸார் சஸ்பெண்ட்.. எஸ்.பி நடவடிக்கை

post image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சரவணன் மற்றும் தனிப்பிரிவு காவலர் ராஜேஷ், மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் செல்வேந்திரன் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சேங்கனூரில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு அனுமதி பெற்ற பார் வசதி இல்லை. இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் டாஸ்மாக்கில் மொத்தமாக மது பாட்டில்கள் வாங்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்துள்ளனர்.

மது விற்பனை

இது குறித்து, நன்னிலம் காவல் நிலையத்தில் சிலர் புகார் அளித்துள்ளனர். இதைதொடர்ந்து நன்னிலம் போலீஸார் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதை உறுதி செய்ததுடன் மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து அதில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்தனர். அதன் பின்னர், கைது செய்யப்பட்ட நபர்களின் செல்போனை பெற்று அதில் யாரெல்லாம் பேசியிருக்கிறார்கள் என ஆய்வு செய்தனர்.

இதில் சரவணன், ராஜேஷ், செல்வேந்திரன் ஆகிய 3 போலீஸார் மது விற்பனையில் ஈடுப்பட்ட நபர்களிடம் அடிக்கடி பேசியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்களை தடுக்காமல், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் அவர்களிடம் இருந்து ஆதாயம் அடைந்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, திருவாரூர் மாவட்ட எஸ்.பி கருண் கரட் மூன்று போலீஸாரையும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு ... மேலும் பார்க்க

கண்ணாடி துகள்; சீனா டிவைஸ்; 100 வழக்குகள் - சொகுசு கார் திருடனின் பகீர் பின்னணி!

சென்னை, அண்ணாநகர் மேற்கு, 16வது மெயின்ரோடு, கதிரவன் காலனியில் குடியிருந்து வருபவர் எத்திராஜ் ரத்தினம். இவர் கடந்த 10.06.2025-ம் தேதி தன்னுடைய Toyoto Fortuner காரை வீட்டின் எதிரில் நிறுத்தி வைத்திருந்த... மேலும் பார்க்க

திருச்சி: கோயில் திருவிழாவில் வாண வெடி வெடித்து குழந்தை பலி; தாய் படுகாயம்; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் திருப்பைஞ்ஞீலி ஊராட்சியில் உள்ள மூவராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். இவர், கொத்தனாராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மனோகரி.இவர்களுக்குத்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சகோதரர்கள் வெட்டி கொலை; கொலையாளிகளைத் தேடும் போலீஸ்; அறந்தாங்கியில் அதிர்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன் (வயது: 32) மற்றும் கார்த்தி (வயது: 28). இதில், கண்ணனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கார்த்தி... மேலும் பார்க்க