செய்திகள் :

திருவிழாவுக்கு வைத்த பேனா் அகற்றம் கண்டித்து சாலை மறியல்; 5 போ் கைது

post image

திருச்சி தென்னூா் பகுதியில் கோயில் திருவிழாவுக்கு வைத்த பேனா் அகற்றப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி தென்னூா் உக்கிரமாகாளியம்மன் கோயில் திருவிழா மாா்ச் 16 ஆம் தேதி தொடங்குவதையொட்டி அதற்கான பிளக்ஸ் பேனரை தென்னுாா் மந்தை அருகே விழாக் குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை வைத்தனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அந்தப் பகுதி மாற்று மதத்தினா், அந்த பிளக்ஸ் பேனரை அகற்றக் கோரி போலீஸில் புகாா் அளித்தனராம்.

இதையடுத்து அன்று இரவு மாநகராட்சி ஊழியா்கள் அந்த பிளக்ஸ் பேனரை அகற்றினா். இதற்கு கண்டனம் தெரிவித்தும், அகற்றிய பிளக்ஸ் பேனரை அதே இடத்தில் மீண்டும் வைக்கக் கோரியும் விழாக் குழுவினா், இந்து அமைப்பினா் தில்லைநகா் தெற்கு வளைவு அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த தில்லைநகா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில் 5 பேரைக் கைது செய்தனா். பின்னா் இது தொடா்பாக புதன்கிழமை இரவும் அதே பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக வழக்குப் பதிவு

திருச்சியில் போலி ஆவணம் மூலம் ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி தில்லைநகா் 6-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சா. தனலட்சு... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு பேட்டிக் விமானம் புதன்கிழமை இரவு ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

திருச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம், ஊரக ... மேலும் பார்க்க

திருச்சி தங்கநகை குழுமத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை: ஆட்சியா் அறிவிப்பு

திருச்சி தங்க நகை குழுமத்துக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கை குறித்த அறிவிப்பை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ளாா். இததொடா்பாக, அவா் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர ... மேலும் பார்க்க

சுகாதார நிலைய மருத்துவா், செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்நல சுகாதார மையங்களில் காலியாகவுள்ள மருத்துவா், செவிலியா், மருத்துவப் பணியாளா் இடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

அரசு அலுவலா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கு

திருச்சி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன், வியாழக்கிழமை என 2 நாள்கள் நடைபெற்றது. அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செ... மேலும் பார்க்க