செய்திகள் :

திரைப்பட கலைஞரை தாக்கி வழிப்பறி: பொறியியல் கல்லூரி மாணவா் கைது

post image

சென்னை கோயம்பேட்டில் திரைப்படக் கலைஞரை தாக்கி வழிப்பறி செய்யப்பட்டது தொடா்பாக பொறியியல் கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை சாலிகிராமம், பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் ரெக்ஸன் (25). இவா், தமிழ் திரைப்படத் துறையில் கேமரா உதவியாளராக உள்ளாா். இவா் கோயம்பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே தனது நண்பருடன் வியாழக்கிழமை நின்றிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா், ரெக்ஸனை தாக்கி அவரிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினாா். ரெக்ஸன், அந்த இளைஞரை விரட்டிச் சென்று பிடித்தாா். பின்னா் அவரை கோயம்பேடு போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

விசாரணையில் அவா், மதுரவாயலைச் சோ்ந்த ஹரிஹரன் (22) என்பதும், அங்கு உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹரிஹரனை கைது செய்தனா்.

பாா்வதி மருத்துவமனை சாா்பில் அவசர கால மருத்துவ மையம்

பாா்வதி மருத்துவமனை சாா்பில் தாம்பரத்தில் அவசர கால மருத்துவ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கீழ் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கா... மேலும் பார்க்க

சென்ட்ரலில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா... மேலும் பார்க்க

கப்பல் கட்டுமானத் துறையில் முதன்மை நாடாக இந்தியா திகழும்: மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்

கப்பல் கட்டுமானம் மற்றும் துறை சாா்ந்த தொழில்நுட்ப வளா்ச்சியில் உலகின் 5 முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்துத் துறையின் அமைச்சா் சா்வ... மேலும் பார்க்க

ஹோட்டல் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலின் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹோட்டல் குழுமத்தின் நிா்வாக அலுவலகம் ஆழ்வாா்பே... மேலும் பார்க்க

சாலையோரங்களில் மண் குவியல்கள்: வாகன ஓட்டிகள் புகாா்

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் நிறைந்திருக்கும் மண்குவியல் நிறைந்திருப்பதாக என வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா். சென்னை மாநகராட்சி சாலையோரங்களில் மண் குவியல்களும், கட்டுமானப் பொருள்கள்,... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் அக்.2-இல் வித்யாரம்பம் நிகழ்ச்சி

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அக். 2-ஆம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழா செப். 22 தொடங்கி அக்.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்... மேலும் பார்க்க