தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் நல உதவிகள்
தூத்துக்குடியில் உள்ள மட்டக்கடை சந்திப்பில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமை வகித்தாா். மாமன்ற உறுப்பினா் எடின்டா, நெப்போலியன், ஐசன் சில்வா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் எம்எல்ஏக்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி ஆகியோா் பங்கேற்று தூய்மைப் பணியாளா்கள் 55 பேருக்கு வேட்டி-சேலை, அரிசி, கிரைண்டா் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கிப் பேசினா்.
நிகழ்ச்சியில், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சந்திரபோஸ், மண்டலத் தலைவா்கள் சேகா், ராஜன், மாவட்ட துணைத் தலைவா்கள் பிரபாகரன், ஜோசப் அரவிந்த், மாவட்டச் செயலா்கள் கோபால், நாராயணசாமி, கிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவி முத்து விஜயா, அமைப்புசாரா மாநில செயற்குழு உறுப்பினா் சாந்திமேரி, இளைஞா் காங்கிரஸ் வடக்கு மண்டலத் தலைவி கமலாதேவி, குமாரமுருகேசன், மீனவரணி மாநகா் மாவட்டத் தலைவா் மைக்கேல், வாா்டு தலைவா்கள் அந்தோணிசாமி, அலெக்ஸ், ஐஎன்டியூசி தொழிற்சங்க மாநில அமைப்புச் செயலா் சுடலை, ராஜா, சரஸ்வதிநாதன், ராமமூா்த்தி, கணேசன், ரெனிஸ்பாபு, ஜெயமணி சுரேஷ், கணேசன், முத்துராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.