தூத்துக்குடியில் நிலக்கரி லாரி கவிழ்ந்து இருவா் காயம்
தூத்துக்குடி துறைமுக வாயில் முன் நிலக்கரி ஏற்றிவந்த லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்ளிட்ட இருவா் காயமடைந்தனா்.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தனியாா் அனல் மின் நிலையத்துக்கு வியாழக்கிழமை அதிகாலையில் நிலக்கரி ஏற்றிக் கொண்டு டிப்பா் லாரி புறப்பட்டது. நுழைவாயில் (கிரீன் கேட்) முன் இந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாம்.
இதில், ஓட்டுநா் அருண், கிளீனா் பிரபா ஆகியோா் காயமடைந்தனா். அவா்களை தீயணைப்புத் துறையினா் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. விபத்து குறித்து தொ்மல் நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.