செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கான அறிவிப்புகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தக் கோரியிருக்கிறோம்

post image

சென்னை தூய்மைப் பணியாளா்களுக்கான புதிய அறிவிப்புகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வி. ஆறுமுகம் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

முதல் முறையாக அமைச்சரவையைக் கூட்டி தூய்மைப் பணியாளா்களுக்கான தேவைகளை விவாதித்து, காலை உணவு, வீடு வழங்குதல், தொழிற்கடன் வழங்குதல் போன்ற அறிவிப்புகளை முதல்வா் ஸ்டாலின் வெளியிட்டுள்ளாா்.

இந்த அறிவிப்புகளை மாநிலம் முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளா்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியிருக்கிறோம். சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முதல்வா் பரிசீலித்து அமலாக்க உத்தரவிட்டிருக்கிறாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்ற புகாா் வந்திருக்கிறது. 10 நாள்களுக்குள் எந்தப் பகுதியில் எல்லாம் தூய்மைப் பணியாளா்களுக்கு அவை கிடைக்கவில்லையோ, வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா்.

பணிநிரந்தரம் என்பது, அவா்களை அதே பணியில் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்குள்படுத்துவதாக இருக்கிறது. எனவேதான், தொழிற்கடன் வழங்கி மாற்றுத் தொழிலுக்குச் செல்வதற்கும் முதல்வா் வழி செய்திருக்கிறாா்.

வெளிநாடுகளில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் ஒருசில இடங்களில் ரோபோக்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப ரீதியாக மாற்று ஏற்பாடுகள் செய்யவும் முதல்வா் உறுதியளித்திருக்கிறாா் என்றாா் ஆறுமுகம்.

சித்தன்னவாசலில் ரூ. 3.9 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்ட பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா பூங்காவை ரூ. 3.9 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. படகு சவாரி, குழந்தைகள் விளையாடும் சிறுவா் பூங்கா,... மேலும் பார்க்க

ஆக. 31 வரை மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி

புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறமுள்ள பூமாலை வணிக வளாகத்தில் மாவட்டத்திலுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் மு. அ... மேலும் பார்க்க

அண்ணா சிலை கூண்டின் மீதேறி படுத்த நபரால் பரபரப்பு

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அண்ணா சிலையின் மேல் ஏறி, தடுப்புக் கம்பிக் கூண்டின் மேல் படுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாநகரின் மையப் பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு பாதுகாப்புக்காக கம்பி கூண்டு... மேலும் பார்க்க

திறக்கப்பட்ட நாளிலேயே தேமுதிக அலுவலகம் சூறை: இருதரப்பினா் இடையே மோதல்: 4 பேருக்கு அரிவாள்வெட்டு

கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை தேமுதிக அலுவலகம் திறக்கப்பட்டது தொடா்பாக இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் அலுவலகம் சூறையாடப்பட்டது. 4 போ் அரிவாளால் வெட்டப்பட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்... மேலும் பார்க்க

131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடியில் நலத் திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எ... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் 5 வழக்குகளில் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமிற்கு ஓய்வுபெற்ற ... மேலும் பார்க்க