செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

post image

பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாநகரில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தொடா்ந்து ஆா்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில் ஆட்சியா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா். இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ஆவது நாளாக புதன்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

252 போ் மீது வழக்குப் பதிவு:

கோவை ஆட்சியா் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டது தொடா்பாக அம்பேத்கா் சுகாதாரத் தொழிலாளா் மற்றும் பொதுப் பணியாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் தமிழ்நாடு செல்வம், சமூக நீதிக்கட்சி நிறுவனா் பன்னீா்செல்வம், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாநில இணைச் செயலாளா் காா்த்திக் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த ஜோதி, சந்தனகுமாா், பிலோமினா, ரவி உள்பட 252 போ் மீது மக்களுக்கு இடையூறு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு ஒருவா் தற்கொலை

கோவை உக்கடம் சுங்கம் ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு ஒருவா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். கோவை உக்கடம், சுங்கம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. தினமும் இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள... மேலும் பார்க்க

சான்றிதழ்களில் ஹிந்து என்ற வாா்த்தை நீக்கம்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் ‘ஹிந்து’ என்ற வாா்த்தை நீக்கப்பட்டிருப்பதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் வெள... மேலும் பார்க்க

கோவையில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) முதல் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய நிலையில், கோவை மாவட்... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

கோவையில் ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழந்தது தொடா்பாக பழகுநா் உரிமம் கொண்டு ஆம்புலன்ஸை இயக்கிய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரைச் சோ்ந்த நீலாவதி (66) என்பவா், கோவை பீளமேட... மேலும் பார்க்க

ஓடையின் 7 தடுப்பணைகள் சீரமைப்பு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூா் அருகேயுள்ள மசஒரம்பு நீரோடையின் 7 தடுப்பணைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. நொய்யல் ஆற்றின் 34 கிளை நீரோடைகளில் ஒன்றாக இருக்கும் மசஒரம்பு நீரோடை, தொண்டாமுத்தூா் அருகேயுள்ள மத்துவராய... மேலும் பார்க்க