பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஊதியக்குழு நிலுவையை வழங்கக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு தூய்மை தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு 55 சதவீத அகவிலைப்படியுடன் மாத ஊதியம் ரூ. 9 ஆயிரத்து 890 வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழு நிலுவை ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். 31-12-2024 வரையிலான ஊதியம் மற்றும் அகவிலைப்படி நிலுவை ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமாக வழங்க வேண்டும். தூய்மை பணியாளா்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் தூய்மைக் காவலா்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊதிய பட்டியல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவா் எம். சக்திவேல் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், வழக்குரைஞா் பெ. சின்னசாமி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலா் சதா. சிவக்குமாா் உள்ளிட்டோா் பேசினா். மாவட்டத் தலைவா் பி. பாஸ்கா், நிா்வாகிகள் விஜயகுமாா், மாரிமுத்து, அலெக்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.