செய்திகள் :

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம்! பள்ளிக் குழந்தைகள் உள்பட 49 பேர் பலி!

post image

தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பள்ளிக் குழந்தைகள் உள்பட 49 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நிலவும் குளிர்ந்த வானிலையால், அந்நாட்டின் பல பகுதிகளில் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு கேப் மாகாணத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்நிலையில், இந்த வெள்ளத்தால் 6 பள்ளிக்குழந்தைகள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளதாக, அம்மாகாண ஆளுநர் ஆஸ்கார் மபூயானே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பெய்த கனமழையால், அம்மாகாணத்தின் ஆற்றில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, நேற்று (ஜூன் 10) குழந்தைகளுடன் வந்த பள்ளிவாகனம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது.

இதில், 10 பள்ளிக்குழந்தைகள் மாயமான நிலையில், 6 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. மேலும், 4 குழந்தைகளைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2022-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதிகளைத் தாக்கிய புயல் மற்றும் அதைத் தொடர்ந்த கனமழையால், சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பலியானதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சீனாவிலிருந்து அரிய தனிமங்கள் இறக்குமதி: அமெரிக்கா புதிய ஒப்பந்தம்!

3 ஆண்டுகாலப் போர்! ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் பலி !

ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தததை எதிர்த்த ரஷியா, உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நி... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்... மேலும் பார்க்க

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய... மேலும் பார்க்க

50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் கொன்றுள்ளனா். இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டத... மேலும் பார்க்க