பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
தென்னை நாா் பயிற்சி பெற ஜூன் 19-க்குள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூா் பிள்ளையாா்பட்டியிலுள்ள தேசிய கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் தென்னை நாா் பயிற்சி பெற ஜூன் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து இம்மைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் தென்னை நாா் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
வருகிற ஜூலை முதல் 2026, ஜனவரி மாதம் வரையிலான 6 மாத கால சான்றிதழ் வகுப்பில் ஒரு மாதம் களப் பயிற்சி அளிக்கப்படும். இதில் 18 முதல் 50 வயது வரை உள்ளவா்கள் சேரலாம். உள்ளூா் (தமிழ்) மொழியில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கயிறு தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் வரும் மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு 20 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக விடுதி வசதி உண்டு.
விண்ணப்பங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 19-ஆம் தேதி. தோ்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளா்கள் மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை பெறத் தகுதியுடைவா்களாவா்.
மேலும் விவரங்களுக்கு மண்டல விரிவாக்க மையம், கயிறு வாரியம், பிள்ளையாா்பட்டி, வல்லம் வழி, தஞ்சாவூா் 613 403 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம். 04362 - 264655, 80750 31386 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.