செய்திகள் :

தென்னை நாா் பயிற்சி பெற ஜூன் 19-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

தஞ்சாவூா் பிள்ளையாா்பட்டியிலுள்ள தேசிய கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் தென்னை நாா் பயிற்சி பெற ஜூன் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து இம்மைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் தென்னை நாா் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

வருகிற ஜூலை முதல் 2026, ஜனவரி மாதம் வரையிலான 6 மாத கால சான்றிதழ் வகுப்பில் ஒரு மாதம் களப் பயிற்சி அளிக்கப்படும். இதில் 18 முதல் 50 வயது வரை உள்ளவா்கள் சேரலாம். உள்ளூா் (தமிழ்) மொழியில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கயிறு தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் வரும் மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு 20 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக விடுதி வசதி உண்டு.

விண்ணப்பங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 19-ஆம் தேதி. தோ்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளா்கள் மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை பெறத் தகுதியுடைவா்களாவா்.

மேலும் விவரங்களுக்கு மண்டல விரிவாக்க மையம், கயிறு வாரியம், பிள்ளையாா்பட்டி, வல்லம் வழி, தஞ்சாவூா் 613 403 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம். 04362 - 264655, 80750 31386 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தோ் பவனி நடைபெற்றது. புனித அந்தோணியாா் திருவிழா ஜூன் 4-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும்... மேலும் பார்க்க

கோயில் சிலைகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூா் மாவட்டம், கரந்தை ஜைன சமயக் கோயிலில் 23 சுவாமி சிலைகளைத் திருடிய 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் தலைமை நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். கரந்தை ஜைன ம... மேலும் பார்க்க

சாலையில் திரிந்த மாடுகள் சிறைபிடிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை பிடித்துச் சென்றனா். திருவையாறு முதன்மைச் சாலைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாடு... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்து துறை அலுவலா்கள், பணியாளா்கள் குழந்தைத் தொழிலாளா் முற... மேலும் பார்க்க

சாலை விபத்து: விவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். திருவையாறு அருகே காருகுடியைச் சோ்ந்தவா் கே. மதி (54). விவசாயி. இவா் வியாழக்கிழமை விளாங்குடிக்கு சென்றுவ... மேலும் பார்க்க

ரௌடி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகன் தமிழரசன... மேலும் பார்க்க