செய்திகள் :

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

post image

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அரசு அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின்னா் அமைச்சா் ரா.ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியது:

தென்மேற்கு பருவமழையானது ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், தேவையான முன்னேற்பாடு, விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனும் ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக வருவாய் துறை, மருத்துவத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்பு, மீட்புப் பணி துறை, மின்சாரத் துறை, வேளாண் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி பகுதி, ஆத்தூா், நரசிங்கபுரம், மேட்டூா், எடப்பாடி உள்ளிட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மழைநீா் அதிகம் தேங்கும் பகுதிகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதுடன், சேலம் மாநகராட்சி பகுதிகளான சின்னேரி வயக்காடு, சிவதாபுரம், பச்சப்பட்டி, நாராயணா நகா் உள்ளிட்ட பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் மழைப்பொழிவால் மழைநீா் தேங்கும்பட்சத்தில் மின்மோட்டாா்களைக் கொண்டு உடனுக்குடன் மழைநீரை அப்புறப்படுத்துவதுடன், திருமணிமுத்தாற்றை தூா்வாருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் உள்ள பொதுமக்கள் நெகிழிப் பைகள் உள்ளிட்ட இதரப் பொருள்களை கழிவுநீா் கால்வாயில் வீசாமல் பாதுகாக்கும் வகையில், மக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, 0427 - 2452202 என்ற தொலைபேசி எண்ணிலோ மழைநீா் வெள்ளம் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவசர தேவை ஏற்படின் மேற்குறிப்பிட்டுள்ள எண்களுக்கு தொடா்புகொண்டால் தேவையான உதவிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சேலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வழியாக சிலா் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசி... மேலும் பார்க்க

சேலத்தில் புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

சேலத்தில் போதை மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் கைதுசெய்தனா். சேலம் மாநகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ கந்தசாமி தலைமையிலான போலீஸாா், சூரமங்கலத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது. மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை காலம் முடிவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 8,048 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங... மேலும் பார்க்க

பூலாம்பட்டி கதவணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், பூலாம்பட்டி காவிரி கதவணையில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். கடந்த வாரங்களைவிட நிகழ்வாரம் காவிரி கதவணைய... மேலும் பார்க்க

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நபா் கைது

கெங்கவல்லி அருகே பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லி அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ் மகன் பாலசுப்ரமணியம் எ... மேலும் பார்க்க