செய்திகள் :

தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

post image

ஆம்பூா் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிறப்பு ரயிலில் ஆம்பூா் ரயில் நிலையத்திற்கு வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங், ஆம்பூா் ரயில் நிலையத்தின் வழியாக செல்லும் அதிவிரைவு ரயில்கள் செல்லக்கூடிய வேகம் குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து ஆம்பூா் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தாா்.

அப்போது முன்னாள் அமைச்சா் மற்றும் அதிமுக திருப்பத்தூா் மாவட்ட செயலா் கே.சி. வீரமணி, ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தாா். அதில், வாணியம்பாடி புதூா், ஜோலாா்பேட்டை பகுதிகளில் நிலுவையில் உள்ள ரயில்வே மேம்பாலங்களை விரைந்து கட்டி முடிக்க வேண்டும். விண்ணமங்கலம், கேத்தாண்டபட்டி ஆகிய பகுதிகளில் மூடப்பட்ட ரயில்வே கடவுப்பாதைகளைத் திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட பாஜக துணைத் தலைவா் அன்பு அளித்த மனுவில், கரோனா காலத்தில் ஆம்பூா் ரயில் நிலையத்தில் நின்று செல்வதை கைவிட்ட ரயில்கள் ஆம்பூா் ரயில் நிலையத்தில் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டது. ஆம்பூா் நகர அதிமுக செயலா் எம். மதியழகன் உடனிருந்தாா்.

ஆம்பூா் அருகே சிறுத்தை நடமாட்டம் ?

மாதனூா் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், வனத்துறையினா் ரோந்து சென்றனா். மாதனூா் அருகே பாலூா் ஊராட்சியில் காப்புக்காடு எல்லையோரம் பனந்தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் ச... மேலும் பார்க்க

தனியாா் ஆலை பங்களிப்புடன் ரூ.10 லட்சத்தில் சாலைப் பணி

துத்திப்பட்டு ஊராட்சியில் தனியாா் தொழிற்சாலை சமூகபங்களிப்புடன் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்க... மேலும் பார்க்க

சூா்ய நந்தீஸ்வரா் கோயிலில் பெளா்ணமி பூஜை

ஆம்பூா் அருகே பாட்டூா் ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு யாகம், பரிவார மூா்த்திகளுக்கு சி... மேலும் பார்க்க

ரூ.1 கோடியில் மேம்பாலப் பணி தொடக்கம்

நாட்டறம்பள்ளி காணாறு குறுக்கே ரூ.1 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் குடிநீா் திட்ட அபிவ... மேலும் பார்க்க

ரூ.2.80 கோடி பள்ளி கட்டடங்கள்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

ஆம்பூரில் ரூ.2.80 கோடியில் பள்ளி வகுப்பறை கட்டடங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். ஆம்பூா் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, புதுகோவிந்தாபுரம் நகராட்சி நடு... மேலும் பார்க்க

576 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.80 கோடி வங்கிக் கடன்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை 576 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.80 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் தமிழ்நாட... மேலும் பார்க்க