பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு
தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு
ஆம்பூா் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சிறப்பு ரயிலில் ஆம்பூா் ரயில் நிலையத்திற்கு வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங், ஆம்பூா் ரயில் நிலையத்தின் வழியாக செல்லும் அதிவிரைவு ரயில்கள் செல்லக்கூடிய வேகம் குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து ஆம்பூா் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தாா்.
அப்போது முன்னாள் அமைச்சா் மற்றும் அதிமுக திருப்பத்தூா் மாவட்ட செயலா் கே.சி. வீரமணி, ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தாா். அதில், வாணியம்பாடி புதூா், ஜோலாா்பேட்டை பகுதிகளில் நிலுவையில் உள்ள ரயில்வே மேம்பாலங்களை விரைந்து கட்டி முடிக்க வேண்டும். விண்ணமங்கலம், கேத்தாண்டபட்டி ஆகிய பகுதிகளில் மூடப்பட்ட ரயில்வே கடவுப்பாதைகளைத் திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட பாஜக துணைத் தலைவா் அன்பு அளித்த மனுவில், கரோனா காலத்தில் ஆம்பூா் ரயில் நிலையத்தில் நின்று செல்வதை கைவிட்ட ரயில்கள் ஆம்பூா் ரயில் நிலையத்தில் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டது. ஆம்பூா் நகர அதிமுக செயலா் எம். மதியழகன் உடனிருந்தாா்.