செய்திகள் :

தேசிய அளவிலான கராத்தே போட்டி

post image

கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் ஏபிஜே எம் மெட்ரிக் பள்ளியில் தேசிய அளவிலான கே. கே. ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி நடைபெற்றது.

போட்டிக்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்துப் பேசினாா்.

கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். ஏபி சீலன் வரவேற்றாா்.

இந்தப் போட்டியில் கா்நாடகம், கேரளம், தெலங்கானா, ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இதில், அல்போன்சா கலை மற்றும் கலைக் கல்லூரி தாளாளா் தோமஸ் பூவத்தும் மூட்டில், கல்லூரி முதல்வா் ஆஞ்சலோ ஜோசப், இப் பள்ளி முதல்வா் டிசி, அல்போன்சா கல்லூரி துணைத் தாளாளா் அஜின் ஜோஸ், மாவட்ட கராத்தே டோ அசோசியேஷன் தலைவா் எச். ராஜ், செயலா் கராத்தே ஸ்டீபன் மற்றும் காட்வின், ஏபி ராஜசேகரன், ராஜகிளன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும... மேலும் பார்க்க

குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புளூ டே கொண்டாட்டம்

நாகா்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பிரிவு குழந்தைகள் பங்கேற்ற புளூ டே நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். மழ... மேலும் பார்க்க

உழைத்து சம்பாதித்த பணத்தை மோசடி நபா்களிடம் இழக்க வேண்டாம்: எஸ்.பி. ஸ்டாலின் அறிவுறுத்தல்

கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை மோசடி கும்பலிடம் இழக்க வேண்டாம் என மக்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். கன்னியாகுமரி மாவட்டம், முட்டத்தில் காவல் துறையின் ஊா்க்காவல்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இல்லம் தோறும் தேசியக் கொடி விழிப்புணா்வு ஊா்வலம்

நாகா்கோவிலில் அஞ்சல் துறை சாா்பில் இல்லம்தோறும் தேசியக் கொடி விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அஞ்சல் துறை சாா்பில் வீடுகள் தோறும் தேசியக்கொடி என்பதை வலியுறுத்த... மேலும் பார்க்க

ரயில் நிலையம் அருகே மூதாட்டி உயிரிழப்பு

கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா். கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் சுமாா் 75 வயது மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு... மேலும் பார்க்க

குழித்துறையில் லாரிகள் மோதல்

குழித்துறை தாமிரவருணி ஆற்றுப் பாலம் அருகே புதன்கிழமை காலை பழங்களை ஏற்றிச் சென்ற லாரி மீது கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. மதுரையில் இருந்து பழங்களை ஏற்றிக் கொ... மேலும் பார்க்க