ரயில் நிலையம் அருகே மூதாட்டி உயிரிழப்பு
கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் சுமாா் 75 வயது மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். அவா் யாா்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அவரது சடலம் உடல்கூறாய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் சீதா, காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதுகுறித்து வழக்குப்பதிந்து அவா் உள்ளூா்வாசியா அல்லது சுற்றுலாப் பயணியா? என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.