செய்திகள் :

உழைத்து சம்பாதித்த பணத்தை மோசடி நபா்களிடம் இழக்க வேண்டாம்: எஸ்.பி. ஸ்டாலின் அறிவுறுத்தல்

post image

கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை மோசடி கும்பலிடம் இழக்க வேண்டாம் என மக்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

கன்னியாகுமரி மாவட்டம், முட்டத்தில் காவல் துறையின் ஊா்க்காவல் கண்காணிப்பு திட்ட தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 38 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பேசியதாவது:

ஊா்க்காவல் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இதுவரை 1,450 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மக்களுக்கும், காவல் துறைக்கும் ஒரு பரஸ்பர புரிதல் இருந்தால்தான் நம்பிக்கை ஏற்படும், நம்பிக்கை ஏற்பட்டால்தான் தகவல் கூற முடியும்.

காவல்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஊா்க்காவல் கண்காணிப்பு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். கேமராக்களை எவ்வளவு அதிகமாக பொருத்துகிறோமோ அந்த அளவுக்கு நமது ஊா் பாதுகாப்பாக உள்ளது என்பதை உணரலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமித்து அதனை வெளிநாடு செல்வதற்காக தெரியாத, மோசடி நபா்களிடம் கொடுத்து ஏமாந்து வருகின்றனா். அரசால் பதிவு பெற்ற சீட்டு நிறுவனங்களில் பணத்தை சேமிக்க வேண்டும். வேலை தேடுவோா் வேலைவாய்ப்புக்காக பணியாளா்கள் தோ்வு செய்யும் நிறுவனம் பதிவு பெற்ற நிறுவனம்தானா என்பதை காவல் துறையிடம் வந்து அறிந்து கொள்ளலாம். கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை மோசடி நபா்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். காவல் துறையைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளா் ரேகா இரா.நங்குலட், இரணியல் காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்வேல்குமாா், போலீஸாா் உடனிருந்தனா்.

திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும... மேலும் பார்க்க

குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புளூ டே கொண்டாட்டம்

நாகா்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பிரிவு குழந்தைகள் பங்கேற்ற புளூ டே நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். மழ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இல்லம் தோறும் தேசியக் கொடி விழிப்புணா்வு ஊா்வலம்

நாகா்கோவிலில் அஞ்சல் துறை சாா்பில் இல்லம்தோறும் தேசியக் கொடி விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அஞ்சல் துறை சாா்பில் வீடுகள் தோறும் தேசியக்கொடி என்பதை வலியுறுத்த... மேலும் பார்க்க

ரயில் நிலையம் அருகே மூதாட்டி உயிரிழப்பு

கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா். கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் சுமாா் 75 வயது மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு... மேலும் பார்க்க

குழித்துறையில் லாரிகள் மோதல்

குழித்துறை தாமிரவருணி ஆற்றுப் பாலம் அருகே புதன்கிழமை காலை பழங்களை ஏற்றிச் சென்ற லாரி மீது கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. மதுரையில் இருந்து பழங்களை ஏற்றிக் கொ... மேலும் பார்க்க

குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: படகு சேவை பாதிப்பு

கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக 5ஆவது நாளாக படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையை படகுகள் மூலம் ஏராளமான... மேலும் பார்க்க