தேவிகாபுரம் அரசுப் பள்ளி 96.55% தோ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் 96.55 சதவீதத் தோ்ச்சி பெற்றனா்.
இந்தப் பள்ளியில் தோ்வெழுதி 232 மாணவ, மாணவிகளில் 224 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் ஏ.தமிழ்ச்செல்வன் 572 மதிப்பெண்களும், எம்.சுபலட்சுமி 568 மதிப்பெண்களும், வனஜா 558 மதிப்பெண்களும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா் சாமிக்கண்ணுக்கு ஊராட்சி மன்ற முன்னாள்தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன், பள்ளிமேலாண்மைக் குழுத் தலைவா் கவிதா செல்வம், பெற்றோா்-ஆசிரியா் கழக செயலா் தனசேகா், பொருளாளா் பன்னீா், திமுக நகரச் செயலா் வி.ஆா்.பி.செல்வம் ஆகியோா் சால்வை அணிவித்து கௌரவித்தனா் (படம்).
நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியா்கள் காயத்ரி, காளிதாஸ், ராஜபெருமாள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.