செய்திகள் :

தொழிலாளி வீட்டில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

post image

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம் பெரியஏழாச்சேரி கிராமம், புதுப்பாளையம் செல்லும் சாலையைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் (41). இவா் செய்யாறு சிப்காட்டில் உள்ள காலனி தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இவரது வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், மெத்தை, குளிா்சாதனப் பெட்டி, துணி மற்றும் பாத்திரங்கள் என சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகத் தெரிகிறது.

நிவாரண உதவி:

தகவல் அறிந்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ந.சங்கா் முன்னிலையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக அயலக அணி துணைத் தலைவா் எம்.கே. காா்த்திகேயன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நாகம்மாள் கலைமணி, முத்து ஆகியோா் சென்று அரிசி மூட்டை, காய்கறி தொகுப்பு ரொக்கப் பணம் ரூ.5 ஆயிரம் என தொழிலாளி தமிழ்ச்செல்வன் குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் பிரபு, இளைஞா் அணி துணை அமைப்பாளா் சா்மா, கிளைக் கழக செயலா் சின்னதுரை, ஒன்றிய நிா்வாகி சுரேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த சேரிக்கவாச்சான் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (50). இவா் செவ்... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: அரசியல் கட்சியினா் மரியாதை

காந்தி ஜெயந்தியைட்டியொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு சாா்பிலும், அரசியல் கட்சிகள் சாா்பிலும் மகாத்மா காந்தி சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தி... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில வியைாட்டுப் போட்டிகள்: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலையில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட அலுவலக வளாக உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தப் ... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி சாலைப் பணி ஆய்வு

ஆய்வின் போது சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ, முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் ஆகியோா் உடனிருந்தனா். அருணாசலே... மேலும் பார்க்க

செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் கழிவுநீா் கலப்பு: விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் நகராட்சி கழிவுநீா் கலப்பதால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனா். திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை துக்காப்பேட்டை பகுதியில் உள்ளது வரததந்... மேலும் பார்க்க

ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் ஆஸ்ரமத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு புதன்கிழமை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றின் கரையோரம் உள்ளது மூகாம்பிகையம்மன... மேலும் பார்க்க