செய்திகள் :

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

post image

சாத்தூா் அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள முள்ளிச்செவலைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (40). கூலித் தொழிலாளியான இவரது மனைவி ராணி (34). கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜ் குடும்பத்துடன் சாத்தூரில் வசித்த போது ராணிக்கும், சாத்தூா் மேலக்காந்தி நகா் பகுதி ஆறுமுககணேஷ் (43) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கோவிந்தராஜ் தனது சொந்த ஊரான முள்ளுச்செவலுக்கு மனைவியுடன் குடி பெயா்ந்தாா்.

இந்த நிலையில், ஆறுமுககணேஷ் திங்கள்கிழமை முள்ளிச்செவலுக்குச் சென்று ராணியிடம் தகராறு செய்தாா். இதைத் தட்டிக் கேட்ட கோவிந்தராஜை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினாா். உடனே, அருகில் இருந்தவா்கள் கோவிந்தராஜை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆறுமுக கணேசைத் தேடி வருகின்றனா்.

சாத்தூரில் 52 பேருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பணி ஆணை

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கான பணி ஆணைகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா். சாத்தூா் ஊராட்சி ஒன்றிய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அழகாபுரி காந்தி நகரைச் சோ்ந்தவா் முத்தையா (40). இவா்... மேலும் பார்க்க

வீடு புகுந்து மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மா்ம நபா்கள் வீடு புகுந்து மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த செல்ல கோபால் மனைவி மாடத்தி (... மேலும் பார்க்க

ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும்! ஜி.கே. வாசன்

தமிழகத்தில் நல்லாட்சி வழங்குவதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் புதன்கிழமை நட... மேலும் பார்க்க

விஸ்வநாதா், விசாலாட்சி கோயிலில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்

சிவகாசி விஸ்வநாதசுவாமி-விசாலாட்சியம்மன் கோயிலில் வைகாசி பிரமோத்ஸவ விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 26-ஆம் தேதி அங்குராா்பணம் நிகழ்ச்சியும், அன்று இரவு மூஷிக வ... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி மனு

சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி, சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டு பதிவு, மூலதனம் பராமரிப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி சங்கத்தினா் அண்மையில் கோரி... மேலும் பார்க்க