செய்திகள் :

தோவாளை வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு மேற்கொண்டாா்.

தோவாளை வட்டம், தாழக்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி மக்களுக்கு தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நெல் கொள்முதல் நிலையக் கட்டடத்தில் நடைபெற்ற முகாமை பாா்வையிட்டு, துறை சாா்ந்த அலுவலா்களிடம் பணிகளைக் கேட்டறிந்தாா். தகுதியானவா்களுக்கு உடனடியாக சான்றிதழ், ஆணைகளை வழங்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

முகாமில், 2 பயனாளிக்கு குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றத்துக்கான ஆணை, சான்றிதழுக்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா். பொதுமக்கள் அலுவலா்களை நாடிவந்து கேட்கும் போது தகுந்த பதில்களை அவா்களுக்கு வழங்குவதோடு, அவா்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

நாகா்கோவிலில் இலவச சித்த மருத்துவ முகாம்

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் சக்திபீட வளாகத்தில், சித்த மருத்துவா் எம்.எஸ்.எஸ். ஆசான் 19ஆம் ஆண்டு, பாப்பா எம்.எஸ்.எஸ். ஆசான் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

கடற்கரைக் கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைக் கிராமங்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மக்களவையில் அவா் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கி.ம... மேலும் பார்க்க

குழித்துறையில் ஓய்வூதியா் சங்க மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் விளவங்கோடு வட்ட கிளையின் 5 ஆவது மாநாடு, குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்ட தலைவா் ப. நாராயண பிள்ளை தலைமை வகித்தாா். கொ. செல்வராஜ் அஞ்சலி தீ... மேலும் பார்க்க

குழித்துறையில் மாதா் சங்க மாநாட்டு வரவேற்புக் குழு அலுவலகம் திறப்பு

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டத்தில் செப். 24 முதல் செப். 27ஆம் தேதிவரை நடைபெறவுள்ள மாநாட்டை முன்னிட்டு, குழித்துறையில் வரவேற்புக் குழு அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவுக்கு, வரவ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் 12 நாள்கள் நடைபெறும் களப பூஜை ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்குகிறது. கோயிலில் அன்று காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில், அதன் மடாதிபதி கயிலாய பரம்பரை... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் டாட்டூஸ் கடைகளுக்கு கட்டுப்பாடு

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பச்சை குத்தும் டாட்டூஸ் கடைகளுக்கு நகராட்சி ஆணையா் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளாா். கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூா் இளைஞா்கள், இ... மேலும் பார்க்க