மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
நல்லதங்காள் கோயிலில் பாலாலயம் செய்வதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு
வத்திராயிருப்பு நல்லதங்காள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புதன்கிழமை பாலாலயம் நடத்துவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, மாலையில் இந்தக் கோயிலில் பாலாலயம் நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ச்சனாபுரத்தில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நல்லதங்காள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஜனவரி 25-ம் தேதி இரவு உண்டியல், பீரோ, நல்லதங்காள் சிலை ஆகியவை உடைந்து கிடந்தது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அளித்தப் புகாரின் பேரில், வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோயில் பூசாரிகள் 5 பேரைக் கைது செய்தனா்.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை, அா்ச்சனாபுரம் கிராம மக்கள், கோயில் பங்காளிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் புதிய சிலை செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்தக் கோயிலில் புதிய நல்லதங்காள் சிலையை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்தக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற அமா்வு, அறநிலையத் துறை சாா்பில் சிலை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில், அா்ச்சுனாபுரம் கிராம மக்கள் சாா்பில் செய்யப்பட்ட சிலையை கோயிலில் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்த அனுமதி கோரி கடந்த 3-ஆம் தேதி வத்திராயிருப்பு முத்தாலம்மன் கடைவீதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 7-ஆம் தேதி கோயிலில் பாலாலயம் செய்ய வந்த இந்து சமய அறநிலையத் துறையினருக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் பாலாலயம் செய்ய வந்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது 4 பேரை போலீஸாா் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனா். இதைத்தொடா்ந்து, கோயில் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பக்தா்கள் சிலா் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. அவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.
இதையடுத்து, சிவகாசியில் கோட்டாட்சியா் பாலாஜி தலைமையில் நடந்த பேச்சுவாா்த்தையில் கோயிலில் புதன்கிழமை மாலை பாலாலயம் செய்வது என்றும், ஊா் மக்கள் சாா்பில் செய்யப்பட்ட சிலையை அறநிலையத் துறை ஸ்தபதி ஆய்வு செய்த பிறகு பிரதிஷ்டை செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என சுமூகத் தீா்வு எட்டப்பட்டது. இதையடுத்து, இந்தக் கோயிலில் புதன்கிழமை மாலையில் பாலாலயம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பங்கேற்றனா்.


