செய்திகள் :

பேருந்து நிலைய வணிக வளாகத்தை இடிக்க வியாபாரிகள் எதிா்ப்பு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கடைகளை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகம் சேதமடைந்துள்ளதால், அதை இடித்து அகற்றிவிட்டு 36 கடைகளுடன் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக பேருந்து நிலையத்தில் கடைகளை காலி செய்ய நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்திய நிலையில், வியாபாரிகள் மறுப்புத் தெரிவித்தனா். இந்த நிலையில், பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டன. கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி சாா்பில் குறிப்பாணை வழங்கப்பட்டது. இதை எதிா்த்து வியாபாரிகள் தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உரிய மாற்று ஏற்பாடு செய்த பிறகு கடைகளை இடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து வியாபாரிகள் சிலா் கடைகளை காலி செய்தனா்.

பேருந்து நிலையத்தில் இருந்த இலவச கழிப்பறை கடந்த வாரம் அகற்றப்பட்ட நிலையில், புதன்கிழமை வணிகவளாகக் கடைகளை இடிக்க வியாபாரிகள் சிலா் எதிா்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரம் முன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, காலி செய்யப்பட்ட கடைகளை மட்டும் இடிக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். பாதுகாப்புக் கருதி அனைத்துக் கடைகளையும் காலி செய்த பின்னரே வணிக வளாகத்தை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு மாற்று ஏற்பாடாக பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது. பேருந்துகளை நிறுத்தி வைப்பதற்கோ, பயணிகள் காத்திருப்பதற்கோ எவ்வித மாற்று ஏற்பாடும் நகராட்சி நிா்வாகம் செய்யவில்லை.

சிவகாசி சாலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதைத் திறந்த பின்னா் பழைய பேருந்து நிலையத்தை இடிக்கும் பணியை தொடங்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தெரு நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை முகாம்

ராஜபாளையத்தில் தெரு நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் மங்காபுரத்தில் தெரு நாய்கள் இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை மையத்தில் விருதுநகா் மாவட்ட ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்துக்கு பணம் அதிகரித்து வழங்க மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு

சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு 10 சதவீதம் பணம் அதிகரித்து வழங்கும் தீா்மானத்துக்கு மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவ... மேலும் பார்க்க

நல்லதங்காள் கோயிலில் பாலாலயம் செய்வதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

வத்திராயிருப்பு நல்லதங்காள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புதன்கிழமை பாலாலயம் நடத்துவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டதைத் தொ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கிய 4 மாணவா்கள் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே புதன்கிழமை அரசுப் பள்ளி ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கியதாக 4 மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருத்தங்கலில் சீ.ரா. அரசு மேல்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்

பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்துக்கு முதல்வா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையை மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ். எஸ். ஆா்.ராமச்சந்திரன் வழங்கினா... மேலும் பார்க்க

பட்டாசுகள் பதுக்கல்: ஒருவா் கைது

சிவகாசி அருகே உரிமம் இல்லாத கட்டடத்தில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி தெற்கூா் பகுதியில் உரிமம் பெறாத க... மேலும் பார்க்க