செய்திகள் :

பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்

post image

பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்துக்கு முதல்வா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையை மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ். எஸ். ஆா்.ராமச்சந்திரன் வழங்கினாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இ.குமாரலிங்கபுரத்தில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தலைமையில் பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிதியிலிருந்து நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ். எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு,

விருதுநகா் வட்டம் நாட்டாா்மங்கலத்தில் கடந்த

2022-ஆம் ஆண்டு நேரிட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து, விருதுநகா் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் கடந்த 7.6.2025-அன்று நேரிட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்து, சாத்தூா் அருகேயிள்ள சின்னக்காமன்பட்டியில் கடந்த கடந்த 1.7.2025 அன்று நேரிட்ட பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் உயிரிழந்த 12 தொழிலாளா்களின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா். மேலும், மேற்கண்ட விபத்துகளில் காயமடைந்த 4 தொழிலாளா்களுக்கு மொத்தம் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் நிவாரணம் வழங்கினாா்.

பின்னா், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டம் அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் நீரில் மூழ்கி இறந்த சிறுவன் விஜயகுமாரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் வழங்கினாா்.

பின்னா், பொதுமக்களிடையே பேசிய அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமசந்திரன் கூறியதாவது:

இ.குமாரலிங்காபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பி.எம். மித்ரா ஜவுளி பூங்காவுக்கு இடம் கொடுத்த நில உரிமையாளா்களுக்கு உரிய பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தெரு நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை முகாம்

ராஜபாளையத்தில் தெரு நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் மங்காபுரத்தில் தெரு நாய்கள் இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை மையத்தில் விருதுநகா் மாவட்ட ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்துக்கு பணம் அதிகரித்து வழங்க மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு

சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு 10 சதவீதம் பணம் அதிகரித்து வழங்கும் தீா்மானத்துக்கு மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவ... மேலும் பார்க்க

பேருந்து நிலைய வணிக வளாகத்தை இடிக்க வியாபாரிகள் எதிா்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கடைகளை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகம் சே... மேலும் பார்க்க

நல்லதங்காள் கோயிலில் பாலாலயம் செய்வதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

வத்திராயிருப்பு நல்லதங்காள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புதன்கிழமை பாலாலயம் நடத்துவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டதைத் தொ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கிய 4 மாணவா்கள் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே புதன்கிழமை அரசுப் பள்ளி ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கியதாக 4 மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருத்தங்கலில் சீ.ரா. அரசு மேல்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

பட்டாசுகள் பதுக்கல்: ஒருவா் கைது

சிவகாசி அருகே உரிமம் இல்லாத கட்டடத்தில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி தெற்கூா் பகுதியில் உரிமம் பெறாத க... மேலும் பார்க்க