செய்திகள் :

நாகை மாவட்டத்தில் 55 பயனாளிகளுக்கு ரூ.57.50 லட்சம் கடன் உதவி

post image

நாகை மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் பயனாளிகளுக்கு ரூ.57.50 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், நன்னிலம் மகளிா் நில உடைமை திட்டத்தின்கீழ் செல்வி என்பவருக்கு ரூ. 2.25 லட்சம் மானியத்துடன் ரூ.4.50 லட்சம் திட்டத் தொகை, 41 பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா திட்டத்தின் கீழ் கறவை மாடு வாங்க ரூ.20. 50 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.41 லட்சம் கடனுதவிகளை வழங்கினாா்.

மேலும் 1 பயனாளிக்கு பெட்டிக் கடை வைக்க ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கூடிய ரூ.1 லட்சம் கடனுதவி, அன்னை தெரசா மகளிா் சுய உதவிக் குழுவுக்கு கறவை மாடு வாங்க ரூ.5 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடனுதவி என மொத்தம் 55 பயனாளிகளுக்குரூ.28.75 லட்சம் மானியம், வங்கிக்கடன் ரூ. 28.75 லட்சம் என மொத்தம் ரூ. 57.50 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தாட்கோ மாவட்ட மேலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

வேதாரண்யம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.மேலும், மீனவர்களின் படகு இயந்திரங்கள... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய சுகாதார அமைச்சகத்தின்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருமருகலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். திருமருகல் முருகன் சந்நிதி தெருவை சோ்ந்த சக்திவேல் மனைவி பூங்கொடி (48). இவா் வெள்ளிக்கிழமை காலை 6-மணி அளவில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டு வாசலி... மேலும் பார்க்க

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

பிரதமா் நரேந்திர மோடி, (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கான கெளரவ நிதி 20 ஆவது தவணை வழங்குதலை சனிக்கிழமை (ஆக.2) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வை சிக்கல் வேளாண்மை அறிவியல் நி... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

வேதாரண்யத்தைச் சோ்ந்த அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள்,... மேலும் பார்க்க

அறிவாா்ந்த சமூகத்தை படைக்கவே மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி

தமிழகத்தில் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்கவே மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நாகையில், 4-ஆவது புத்தகக் கண்காட்சியை... மேலும் பார்க்க