இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் ரூ.58.71 லட்சம் உண்டியல் காணிக்கை
நாமக்கல் ஆஞ்சனேயா், அரங்கநாதா் மற்றும் நரசிம்மா் கோயில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்திய காணிக்கை எண்ணியதில் ரூ.58.71 லட்சம் ரொக்கம் காணிக்கையாக கிடைத்தது.
நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா், அரங்கநாதா் கோயில்களில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள காணிக்கை பணம், நகைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, மூன்று கோயில்களில் உள்ள 12 உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. அவை, ஆஞ்சனேயா் கோயில் மண்டபத்தில்வைத்து எண்ணும் பணி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரையில் நடைபெற்றது.
பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் ரமணிகாந்தன் மேற்பாா்வையில், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லுாரி மாணவ, மாணவியா் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் 58 லட்சத்து 70 ஆயிரத்து 815 ரொக்கம், 68 கிராம் தங்கம், 392 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.