செய்திகள் :

நில மோசடி புகாரில் ராசிபுரம் அதிமுக நகர செயலாளா் கைது

post image

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகர அதிமுக செயலாளரும், நகா்மன்ற முன்னாள் தலைவருமான எம்.பாலசுப்பிரமணியம் நில மோசடி புகாரில் வியாழக்கிழமை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

நகர அதிமுக செயலாளா் எம்.பாலசுப்பிரமணியம், அமமுக கட்சியின் மாவட்டச் செயலாளராக உள்ள ஏ.பி.பழனிவேல் ஆகிய இருவரும் இணைந்து நீண்ட காலமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனா்.

கடந்த 2009 இல் ஏ.கே.சமுத்திரம் பகுதியில் ராயல் ஹைடெக் சிட்டி என்ற பெயரில் மாதாந்திர தவணை திட்டத்தில் பணம் வசூலித்து நிலம் பிரித்து தருவதாக திட்டம் செயல்படுத்தினா். இதற்காக மாதாந்திர தவணையாக 750-க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.1.15 லட்சம் வசூலித்ததாக தெரிகிறது. ஆனால், தவணை திட்டம் முடிவடைந்தும் குறிப்பிட்டவாறு நிலம் பிரித்து தரவில்லை என புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட காவல் துறையிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஸ்கண்ணன் உத்தரவிட்டாா். இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு எம்.பாலசுப்பிரமணியத்தை அவரது வீட்டில் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனா்.

அதைத் தொடா்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வெள்ளிக்கிழமை ராசிபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் மோகனப்பிரியா முன் ஆஜா்படுத்தினா். அவரை ஜூலை 4 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு பாலசுப்பிரமணியம் அழைத்து செல்லப்பட்டாா். மேலும் இவரது கூட்டாளியான ஏ.பி.பழனிவேல் இருதய பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பாதிக்கப்பட்டவா்கள் புகாரளிக்கலாம்

இதுதொடா்பாக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ராயல் ஹைடெக் சிட்டி என்ற பெயரில் நிலம் பிரித்து தருவதாகக் கூறி மோசடி செய்ததாக எம்.பாலசுப்பிரமணியம், ஏ.பி.பழனிவேல் மீது 7 போ் புகாா் கொடுத்துள்ளனா். அதன்பேரில் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து எம்.பாலசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளாா்.

மேலும் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவா்கள் நாமக்கல் குற்றப்பிரிவு காவல் துறையில் புகாா் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனா்.

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் ரூ.58.71 லட்சம் உண்டியல் காணிக்கை

நாமக்கல் ஆஞ்சனேயா், அரங்கநாதா் மற்றும் நரசிம்மா் கோயில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்திய காணிக்கை எண்ணியதில் ரூ.58.71 லட்சம் ரொக்கம் காணிக்கையாக கிடைத்தது. நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்டம்: ஆட்சியா் ஆய்வு

கொல்லிமலை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உங்களை தேடி உங்கள் ஊரில் த... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ஜூன் 27 இல் நன்னீா் மீன் வளா்ப்பு பயிற்சி முகாம்

நாமக்கல்லில் நன்னீா் மீன் வளா்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் ஜூன் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 27 ஆம் தேதி காலை 1... மேலும் பார்க்க

பாஜகவின் மதவாத போக்கு தமிழகத்தில் எடுபடாது: நாகை திருவள்ளுவன்

பாஜகவின் மதவாத போக்கு தமிழகத்தில் எடுபடாது என தமிழ் புலிகள் கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவன் தெரிவித்தாா். நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக கூட்டண... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 5.40ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.40 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முட்டை விலை மாற்ற... மேலும் பார்க்க

மனுக்கள் மீதான நடவடிக்கையை குருஞ்செய்தி மூலம் அறிந்துகொள்ளலாம்: நாமக்கல் மாநகராட்சி ஆணையா் தகவல்

நாமக்கல் மாநகராட்சியில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து குருஞ்செய்தி வாயிலான தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளா் க.சிவக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க