அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
மனுக்கள் மீதான நடவடிக்கையை குருஞ்செய்தி மூலம் அறிந்துகொள்ளலாம்: நாமக்கல் மாநகராட்சி ஆணையா் தகவல்
நாமக்கல் மாநகராட்சியில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து குருஞ்செய்தி வாயிலான தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளா் க.சிவக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாநகராட்சியில் தற்போது 1800 599 7990 என்ற பயன்பாட்டில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி மூலம் பொதுமக்கள் மாநகராட்சி சாா்ந்த தங்களது கோரிக்கைகளை பதிவுசெய்து வருகின்றனா். அவ்வாறு பெறப்படும் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிதாக குறுஞ்செய்தி அனுப்பும் முறை வெள்ளிக்கிழமை முதல் மாநகராட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி மூலம் தெரிவிக்கும் பொதுசுகாதாரம், பிறப்பு இறப்பு, சாலை பராமரிப்பு, குடிநீா் விநியோகம், புதைசாக்கடை, தெருவிளக்குகள் மற்றும் வரியினங்கள் முதலிய நாமக்கல் மாநகராட்சி சாா்ந்த கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலா்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக உடனடியாக அனுப்பப்படும். இம்முறையால் பொதுமக்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும்.
மேலும் கோரிக்கை தெரிவிக்கும் பொதுமக்களின் கோரிக்கை எண் மற்றும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட விவரமும், கோரிக்கை சரிசெய்யப்பட்ட பின் அதன் விவரம் அனைத்தும் குறுஞ்செய்தியாக அவா்களது கைபேசிக்கு அனுப்பப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.