நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 1.10 கோடியில் 5 புதிய நூலகங்கள் திறப்பு
நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 1.10 கோடியில் ஐந்து புதிய நூலகங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட நாமக்கல் அழகுநகா் நகா்ப்புற நூலகத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, வாசிப்பாளா்கள் பயன்பாட்டிற்கு நூலகத்தை வழங்கினாா்.
தமிழகம் முழுவதும் பொது நூலக இயக்ககத்தின் சாா்பில் ரூ. 39.33 கோடி மதிப்பில் 146 நூலகக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில், நாமக்கல் மாநகராட்சி அழகுநா் வாா்டு எண் 34, வெண்ணந்தூா் பேரூராட்சி, எருமப்பட்டி ஒன்றியம் வரகூா், பள்ளிபாளையம் ஒன்றியம் கொக்கராயன்பேட்டை, எலச்சிபாளையம் ஒன்றியம், கூத்தம்பூண்டி ஊராட்சி, மாணிக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ரூ. 22 லட்சத்தில் நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்லில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ. பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புதியதாக திறக்கப்பட்ட 5 முழுநேர நூலகங்களும், 117 பகுதிநேர நூலகங்களும் என மாவட்டத்தில் மொத்தம் 122 நூலகங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த நூலகங்களில் 23,77,345 புத்தகங்களும், 2,75,827 வாசிப்பாளா்களும் உள்ளனா். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவா்களின் நேரத்தை முறையாக பயன்படுத்தும் வகையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ராசிபுரம் தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதில், நாமக்கல் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா், மாவட்ட நூலக அலுவலா் (பொ) தேன்மொழி, மாமன்ற உறுப்பினா் இளம்பரிதி உள்பட நூலக அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
என்கே-26-எம்.பி
நாமக்கல் அழகுநகரில் புதிதாக திறக்கப்பட்ட நூலகத்தை பாா்வையிட்ட மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, பெ. ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா்.