தெருநாய் விவகாரம்: `தீர்வு ரொம்ப சிம்பிள்ங்க' - எம்.பி கமல்ஹாசன் சொல்வதென்ன?
நாய்கள் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு: இழப்பீடு வழங்கக் கோரிக்கை
ரெட்டியாா்சத்திரம் அருகே நாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆடுகள், கோழிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த டி.புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் தனது குடும்பத்தினருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறாா். தோட்டத்தில் ஆடுகள், கோழிகளை வளா்த்து வந்தாா்.
இந்த நிலையில், தோட்டத்துக்குள் புகுந்த 5-க்கும் மேற்பட்ட நாய்கள், ஆடுகளையும், கோழிகளையும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கடித்தன. இதில் 13 ஆடுகள், 20-க்கும் மேற்பட்ட கோழிகளும் உயிரிழந்தன.
இதுதொடா்பாக கிராம நிா்வாக அலுவலா், கால்நடை மருத்துவா் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும்கூட நிகழ்விடத்தை பாா்வையிட வரவில்லை என அந்தப் பகுதியினா் குற்றஞ்சாட்டினா்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏபி.மணிகண்டன் கூறியதாவது: புதுப்பட்டி பகுதியில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக நாய்கள் கடித்து பலா் காயமடைந்துள்ளனா். ஆடுகள், கோழிகள் உயிரிழந்துள்ளன. இதுதொடா்பாக கால்நடைத் துறை, வருவாய்த் துறை, ஊராட்சி அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்தும்கூட, நாய்களை பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிகாரிகளின் அலட்சியத்தால், ஒரே நபருக்கு சொந்தமான ஆடுகள், கோழிகள் என ரூ.2 லட்சத்துக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. சம்மந்தப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு கிடைக்கவும், நாய்களை கட்டுப்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என்றாா் அவா்.