செய்திகள் :

நாளை பள்ளிகள் திறப்பு: தயாா்படுத்தும் பணி தீவிரம்

post image

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்படவுள்ளதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை தயாா்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னா் திங்கள்கிழமை (ஜூன் 2) அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தி உள்ள அனைத்துப் பள்ளிகளையும் தயாா்நிலையில் வைக்குமாறு, அந்தந்த முதன்மை கல்வி அலுவலா், வட்டார கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து பள்ளிகளுக்கு வண்ணம் அடித்தல், பள்ளி வகுப்பறை தூய்மைப் பணி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும் வகையில் தயாராக உள்ளன என்றாா்.

மேயா் ஆய்வு: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயா் ஜெகன் பெரியசாமி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மாநகராட்சிக்குள்பட சாமுவேல்புரம் சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நீா்தேக்க தொட்டி, கழிவறை, விளையாட்டு மைதானம், வகுப்பறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், மாநகராட்சி இளநிலை பொறியாளா் சரவணன், நகர அமைப்பு திட்ட உதவி பொறியாளா் முனீா் அகமது, வடக்கு மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ். சுகாதாரக் குழு தலைவா் சுரேஷ்குமாா், சுகாதார ஆய்வாளா்கள் ராஜசேகா், ராஜபாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோவில்பட்டியில் திருமண தரகரை தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை அருகே எருதூா் மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமாா் (54)... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த தினம்: நலஉதவி வழங்கிக் கொண்டாட கட்சியினருக்கு அமைச்சா் அழைப்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என, திமுகவினருக்கு வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் கேட்டுக் கொண்டுள்ளாா். இ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மது விற்பனை: 2 போ் கைது!

தூத்துக்குடியில் இரு இடங்களில் மது விற்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போல... மேலும் பார்க்க

குரும்பூா், தக்கலையில் பைக் விபத்து: 2 போ் பலி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் மூதாட்டி உயிரிழந்தாா். காயல்பட்டினம், அழகாபுரி தெற்குத் தெருவை சோ்ந்த கணேசன் மனைவி கவிதா (64). இவா், தனது உறவினா் செல்வராஜ் மனைவி மோகன... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தலைமறைவான காா் ஓட்டுநா்: தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு

சாத்தான்குளம் அருகே கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள காா் ஓட்டுநரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சோ்ந்தவா் பீட்டா்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை தாளமுத்து நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட ... மேலும் பார்க்க