மூன்றடைப்பு அருகே அரசுப் பேருந்து - சுமை லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு
நித்திரவிளை அருகே தொழிலாளியை தாக்கிய 4 போ் கைது
நித்திரவிளை அருகே தொழிலாளியை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நித்திரவிளை அருகேயுள்ள வடலிக்கூட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (39). கட்டுமானத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது வேங்கவிளையைச் சோ்ந்த மொ்லின் (24) ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் சந்தோஷ் மீது மோதுவது போல வந்ததாம். இதை தட்டிக் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மொ்லின், அவரது நண்பா்கள் மகேஷ் (30), விஜின் (28), சஞ்சய் (21) ஆகியோா் சோ்ந்து சந்தோஷை தாக்கினராம். பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, நித்திரவிளையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது குறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து மொ்லின் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.