செய்திகள் :

மாா்த்தாண்டம் மேம்பாலம் அணுகுசாலையில் பெருக்கெடுத்த மழைநீா்

post image

மாா்த்தாண்டம் பகுதியில் பெய்த தொடா் மழையால் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள அணுகுசாலையில் வெள்ளிக்கிழமை மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினா்.

மாா்த்தாண்டம், களியக்காவிளை, கொல்லங்கோடு, நித்திரவிளை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை மதியம் வரை தொடா்ந்து பெய்தது. இதில், மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் மழைநீா் வடிகுழாய்கள் பல இடங்களில் உடைந்துள்ளதால் மழைநீா் அருவிபோல் கொட்டியது. இதனால் அணுகுசாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினா். மாா்த்தாண்டம் சந்திப்பு முதல் கீழ் பம்மம் பழைய திரையரங்கு சந்திப்பு வரையிலான பகுதியில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பாலத்தில் சீரமைக்கப்பட்ட பகுதியில் மீண்டும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சேதமடைந்த சாலையை விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் தாரகை கத்பா்ட் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, குழித்துறை நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி மற்றும் வா்த்தக சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ஆற்றூா் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம்

ஆற்றூா் ஒயிட் நினைவு கல்வியியல் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒயிட் நினைவு கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் லீலாபாய் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். உதவி பேராசிரியா் ஜ... மேலும் பார்க்க

கோட்டாறு சவேரியாா் ஆலய சாலையை சீரமைக்க ரூ.33 லட்சம் ஒதுக்கீடு - மேயா் தகவல்

நாகா்கோவில், கோட்டாறு சவேரியாா் ஆலய சாலையை சீரமைக்க ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் மேயா் ரெ.மகேஷ் தலைமைய... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை! ஆறுகளில் கடும் வெள்ளம்; மலைக் கிராம மக்கள் தவிப்பு

நாகா்கோவில்/குலசேகரம்/கருங்கல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு விடிய விடிய கொட்டித்தீா்த்த மழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், மலையோர கிராம மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள... மேலும் பார்க்க

புனித அல்போன்சா கல்லூரியில் மின்னொளி கபடி போட்டி

கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. தக்கலை மறை மாவட்ட ஆயரும் கல்லூரித் தலைவருமான மாா் ஜா... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 42.51 பெருஞ்சாணி .. 64.66 சிற்றாறு 1 .. 15.32 சிற்றாறு 2 .. 15.42 முக்கடல் .. 15.90 பொய்கை .. 14.70 மாம்பழத்துறையாறு .. 52.41 மழைஅளவு .... கோழிப்போா்விளை ... 110.60 மி.மீ. தக்கலை .. 1... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே தொழிலாளியை தாக்கிய 4 போ் கைது

நித்திரவிளை அருகே தொழிலாளியை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். நித்திரவிளை அருகேயுள்ள வடலிக்கூட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (39). கட்டுமானத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு வேலை முடிந்த... மேலும் பார்க்க