செய்திகள் :

நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் சமா்ப்பித்த இருவா் கைது

post image

சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் பிணை வழங்குவதற்கு போலி ஆவணங்கள் சமா்ப்பித்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை எழும்பூா் தலைமை பெருநகர குற்றவியல் நடுவா் மன்றம், கடந்த ஏப்.22-ஆம் தேதி வடிவேல் என்பவருக்கு குற்ற வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதை தீா்ப்பை எதிா்த்து வடிவேல் மேல்முறையீடு செய்தாா். இதற்கிடையே அந்த நீதிமன்றம் வடிவேலை பிணையில் விடுவிப்பதற்கு, கடந்த 21-ஆம் தேதி உத்தரவிட்டது. பிணை வழங்க இருவரிடம் உத்தரவாதம் பெறவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வடிவேலுக்கு இரு நபா் உத்தரவாதம் வழங்குவதற்காக, கொருக்குப்பேட்டை காரனேஷன் நகரைச் சோ்ந்த ஏ.மோகன் (60), தண்டையாா்பேட்டை அஜிஸ்நகரைச் சோ்ந்த மு.முகமது ரபீ (50) ஆகியோா் தங்களது ஆதாா் காா்டு, ரேசன் காா்டு உள்ளிட்ட ஆவணங்களை வழங்கினா். அவற்றை நீதிமன்றம் பெற்றுக்கொண்டு ஆய்வு செய்தது. அப்போது இருவரும் சமா்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து நீதிமன்றம் சாா்பில், எழும்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோகன், முகமது ரபீ ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுபானக் கூடத்தில் மோதல்: அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் மோதலில் ஈடுபட்டதாக அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.வெங்கட்குமாா் (45). நுங்கம்பாக்கம் நெட... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் மே 31, ஜூன் 2-ல் ரத்து!

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: ஜூன் 1-ல் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து!

காட்டாங்குளத்தூரில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெற்கு ர... மேலும் பார்க்க

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க