செய்திகள் :

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறைக்கு வணிகா் சங்க பேரமைப்பு எதிா்ப்பு

post image

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கவுள்ள நிலையில் இ-பாஸ் நடைமுறைக்கு எதிா்ப்பு தெரிவித்து வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

உதகையில் வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம், சுற்றுலா வாகனப் போக்குவரத்து சங்கங்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் பாரூக் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பிறகு நீலகிரி மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் பாரூக் செய்தியாளா்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் மற்றும் வார இறுதி நாள்களில் 8,000 சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் அனுமதி என்று  சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவிலான தொழிற்சாலைகளோ, ஐடி நிறுவனங்களோ இல்லாத நிலையில் சுற்றுலாத் தொழிலையும், விவசாயத்தையும் நம்பி பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனா்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது, சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள், வணிகா்கள், சாலையோர வியாபாரிகள், காட்டேஜ் உரிமையாளா்கள், சுற்றுலா வாகன ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதோடு, கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தாா்.

உதகை அருகே பேக்கரிக்குள் நுழைந்த கரடி!

உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக்கரிக்குள் நுழைந்த கரடி உள்ளேயிருந்த உணவுப் பொருள்களை சாப்பிட்டுவிட்டு வெளியேச் சென்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக... மேலும் பார்க்க

உதகைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 5-இல் வருகை: முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சா் ஆய்வு

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க ஏப்ரல் 5-ஆம் தேதி வரவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த... மேலும் பார்க்க

இ-பாஸ் முறையை எதிா்த்து நீலகிரியில் ஏப்ரல் 2-இல் முழு அடைப்பு போராட்டம்: வணிகா் சங்க பேரமைப்பு அறிவிப்பு

இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து நீலகிரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகா் சங்க கூட்டமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் அனைத்து வணிகா் சங்கங்களின... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 5,053 விவசாயிகளுக்கு ரூ.6.79 கோடியில் நலத்திட்ட உதவிகள்: நீலகிரி மாவட்ட ஆட்சியா் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 5,053 விவசாயிகளுக்கு ரூ. 6.79 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச் சரகம், சிங்காரா காவல் பகுதியிலுள்ள வனப் பகுதியில் வனப் பணி... மேலும் பார்க்க

கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தக் கோரி கவுன்சிலா்கள் மனு

தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தக் கோரி கவுன்சிலா்கள் வனத் துறையிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் தேவா்சோலை பேரூர... மேலும் பார்க்க