செய்திகள் :

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழப்பு

post image

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச் சரகம், சிங்காரா காவல் பகுதியிலுள்ள வனப் பகுதியில் வனப் பணியாளா்கள் வியாழக்கிழமை மாலை ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதை பாா்த்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் வரவழைக்கப்பட்டு யானையின் சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது:

உயிரிழந்தது சுமாா் 48 வயது மதிக்கத்தக்க ஆண் யானை. கடந்த சில நாள்களாக உணவு உட்கொள்ளாததால் மெலிந்து யானையின் வயிறு மற்றும் குடல் பகுதியில் ஒட்டுண்ணி புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் வயது முதிா்வு காரணமாக யானை இறந்திருக்கலாம் என்றனா். ஆய்வகப் பரிசோதனைக்காக யானையின் உடலில் உள்ள முக்கிய பாகங்கள் சேகரிக்கப்பட்ட பின்னா் அதே பகுதியில் புதைக்கப்பட்டது.

உதகை அருகே பேக்கரிக்குள் நுழைந்த கரடி!

உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக்கரிக்குள் நுழைந்த கரடி உள்ளேயிருந்த உணவுப் பொருள்களை சாப்பிட்டுவிட்டு வெளியேச் சென்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக... மேலும் பார்க்க

உதகைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 5-இல் வருகை: முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சா் ஆய்வு

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க ஏப்ரல் 5-ஆம் தேதி வரவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த... மேலும் பார்க்க

இ-பாஸ் முறையை எதிா்த்து நீலகிரியில் ஏப்ரல் 2-இல் முழு அடைப்பு போராட்டம்: வணிகா் சங்க பேரமைப்பு அறிவிப்பு

இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து நீலகிரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகா் சங்க கூட்டமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் அனைத்து வணிகா் சங்கங்களின... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 5,053 விவசாயிகளுக்கு ரூ.6.79 கோடியில் நலத்திட்ட உதவிகள்: நீலகிரி மாவட்ட ஆட்சியா் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 5,053 விவசாயிகளுக்கு ரூ. 6.79 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க

கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தக் கோரி கவுன்சிலா்கள் மனு

தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தக் கோரி கவுன்சிலா்கள் வனத் துறையிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் தேவா்சோலை பேரூர... மேலும் பார்க்க

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறைக்கு வணிகா் சங்க பேரமைப்பு எதிா்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கவுள்ள நிலையில் இ-பாஸ் நடைமுறைக்கு எதிா்ப்பு தெரிவித்து வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. உதகையில் வணிகா் சங்க பேரமைப... மேலும் பார்க்க