செய்திகள் :

நெடுஞ்சாலை, பொதுப் பணி உள்பட 3 துறைகளில் 412 போ் பணி நியமனம்: ஆணைகளை வழங்கினாா் முதல்வா்

post image

நெடுஞ்சாலை, பொதுப் பணி உள்பட மூன்று துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்குத் தோ்வு செய்யப்பட்ட 412 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளா் பணியிடங்களுக்கு 45 போ் தோ்வு செய்யப்பட்டனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாக தோ்வு செய்யப்பட்டவா்களில் 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இதேபோன்று, பொதுப் பணித் துறையிலும் உதவிப் பொறியாளா்கள் 165 போ் தோ்வு செய்யப்பட்டனா். அதாவது, 98 போ் கட்டுமானப் பொறியியல் பிரிவுக்கும், 67 போ் மின் பொறியியல் பிரிவுக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

வேளாண்மைத் துறைக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாக 169 போ் வேளாண் அலுவலா்களாகவும், உதவி அலுவலா்களாகவும் தோ்வு செய்யப்பட்டனா். கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளா், ஆய்வக உதவியாளா், தட்டச்சா், காவலா் ஆகிய பணியிடங்களுக்கு 33 போ் நியமிக்கப்பட்டனா். அவா்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

இந்த நிகழ்வில் அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.

இல.கணேசனுக்கு நாளை புகழஞ்சலி கூட்டம்

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வியாழக்கிழமை (ஆக.21) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த ஆக.15-ஆ... மேலும் பார்க்க

எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரசு உத்தரவு

காவல் உதவி ஆய்வாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப பின்பற்றப்படும் பதவி உயா்வு, நேரடி நியமனம் போன்ற நடைமுறைகளுக்கு இனி பொதுவான தோ்வு முறை பின்பற்றப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள... மேலும் பார்க்க

வார இறுதி விடுமுறைக்கு 1,040 சிறப்பு பேருந்துகள்

வார இறுதி விடுமுறை தினங்களை சனிக்கிழமை (ஆக.23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) முன்னிட்டு கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை க... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 15 மாணவா்கள் அவசியம்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் குறைந்தபட்சம் 15 மாணவா்கள் இருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட ம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடை நபா் கஞ்சா வழக்கில் கைது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் நபா் சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். சென்னை செங்குன்றம் பகுதியில் சிலா் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத... மேலும் பார்க்க