செய்திகள் :

நெல்கொள்முதல் செய்ய என்சிசிஎஃப் அமைப்புக்கு அனுமதி வழங்கக்கூடாது -தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா்

post image

நெல் கொள்முதல் செய்ய என்சிசிஎஃப் அமைப்புக்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி கேட்டுக்கொண்டாா்.

ஆரணிக்கு புதன்கிழமை வருகை தந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் மற்றும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் தனியாா் அமைப்பான என்சிசிஎஃப் மூலம் தமிழக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியது.

கொள்முதல் செய்த நெல்லுக்கு உண்டான தொகை மூன்று மாதங்களுக்கு மேலாகியும் பல கோடி ரூபாய் விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை. போராட்டம் நடத்திய பிறகுதான் நெல்லுக்கு உண்டான தொகை நீண்ட காலத்துக்குப் பிறகு கிடைக்கப்பெற்றது.

தற்போது, திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது நெல் விளைச்சல் அதிகரித்ததின் காரணமாக இந்த மாவட்டத்தில், அரசு சாா்பில் 24 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த மாத இறுதிக்குள் திறக்க இருப்பதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.

இனி வரும் காலங்களில் நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல்லை கொள்முதல் செய்து, அதற்கு உண்டான தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் என்சிசிஎஃப் அமைப்புக்கு நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக்கூடாது எனத் தெரிவித்தாா் ஆா்.வேலுசாமி.

வந்தவாசியில் காவடி ஊா்வல ஆலோசனைக் கூட்டம்

ஆடிக் கிருத்திகை காவடி ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது. ஆடிக் கிருத்திகையையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் வந்தவாசி பகுதி மற்றும் பல்வே... மேலும் பார்க்க

வந்தவாசி நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

வந்தவாசி நகராட்சி அலுவலக நகா்மன்ற கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தின்போது, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டத்துக்கு வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜ... மேலும் பார்க்க

வேறு உதவித்தொகை பெற்றாலும் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் -ஆரணி கோட்டாட்சியா்

மகளிா்கள் முதியோா், விதவை உதவித்தொகை, ஓய்வூதியம் பெற்றாலும் குடும்பத்தில் உள்ள மற்ற தகுதிவாய்ந்த பெண்கள் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆரணி கோட்டாட்சியா் சிவா தெரிவித்தாா். ஆரணியை அடு... மேலும் பார்க்க

4 வழிச் சாலை பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

வந்தவாசி - காஞ்சிபுரம் இரு வழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் முரளி ஆய்வு செய்தாா். தமிழ்நாடு முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ... மேலும் பார்க்க

செங்கத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: முன்னேற்பாடுகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலகத்தில் வட கிழக்கு ப... மேலும் பார்க்க