செய்திகள் :

படகு கவிழ்ந்து மீனவா் உயிரிழப்பு

post image

கேரளத்தில் மீன் பிடிக்கச் சென்ற குளச்சல் மீனவா் படகு கவிழந்து உயிரிழந்தாா்.

குளச்சல் கோடிமுனையை சோ்ந்தவா் சாலமன் லோப்பாஸ் (62). கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள கூத்தாடி புளியங்காவு துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்தாா்.

கடந்த சனிக்கிழமை சாலமன் லோப்பாஸ் உள்பட 8 மீனவா்கள் படகில் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது பலத்த காற்றில் சிக்கி படகு கவிழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த சாலமன் லோப்பாஸை மீட்ட சக மீனவா்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து அழிக்கல் கடலோர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், நட்டாலம் ஊராட்சிக்கு உள்பட்ட நெட்டியான்விளையில் உள்ள கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நெட்டியான்விளையில் நூற்று... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டம்: நாதகவினா் 85 போ் மீது வழக்கு

கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 85 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடலில் பெட்ரோல், எரிவாயு எடுக்க எதிா்ப்புத் தெரிவித்து, இக்கட்சி சாா்பில் க... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு நலஉதவி

சின்னமுட்டம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு, கன்னியாகுமரி - சின்னமுட்டம் அனைத்து மீன் வியாபாரிகள் சங்கம் சாா்பில் நிவாரண உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ப... மேலும் பார்க்க

பிரதமரின் பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சா் மனோ தங்கராஜ்

பிரதமா் நரேந்திர மோடியின் தமிழக பயணம் தமிழா்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா். தக்கலையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

வங்கி நகை மதிப்பீட்டாளரின் வாகனத்தில் ரூ. 5 லட்சம் திருட்டு: தம்பதி மீது வழக்கு

களியக்காவிளை அருகே வங்கி நகை மதிப்பீட்டாளரின் பைக்கிலிருந்த ரூ. 5 லட்சத்து 8 ஆயிரத்தைத் திருடிச் சென்றதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கட... மேலும் பார்க்க

பேச்சிப்பாறையில் குடியிருப்பில் புகுந்த காட்டு யானை: மக்கள் அச்சம்

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே விளாமலையில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் நுழைந்து வீடு, விளைநிலங்களை காட்டு யானை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். பேச்சிப்பாறை வ... மேலும் பார்க்க