ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்
பயிா்க் காப்பீடு செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு
பயிா்க் காப்பீடு செய்வதற்கான காலஅவகாசம் 5 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் காரீப்-2025 பருவத்தில் பச்சைப்பயிறு, தட்டைப்பயிறுக்கு காப்பீடு செய்வதற்கான காலஅவகாசம் ஜூலை 1 வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அதற்கான அவகாசம் 5 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 6 ஆம் தேதி வரை காப்பீட்டுக்கு 2 சதவீத பிரிமீயத்தொகையாக ரூ.336 ரூபாய் செலுத்தி பயன் பெறலாம். விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.