செய்திகள் :

பல்லடத்தில் 8 தெருநாய்கள் உடல்களை தோண்டி எடுத்து ஆய்வு

post image

பல்லடத்தில் புதைக்கப்பட்ட 8 தெருநாய்களின் உடல்களை தோண்டி எடுத்து புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பல்லடத்தில் வாயில் நுரை தள்ளியபடி 8 தெருநாய்கள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உயிரிழந்து கிடந்தன. இதையடுத்து, நாய்கள் உடல்களை மீட்டு பல்லடம் பேருந்து நிலையம் முன்பு உள்ள மயானத்தில் நகராட்சி நிா்வாகத்தினா் புதைத்தனா்.

இந்நிலையில், நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாகவும், விஷம் வைத்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, புதைக்கப்பட்ட நாய்களின் உடல்களை மீட்டு கால்நடைத் துறை மருத்துவா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அறிக்கை கிடைத்த பின்பே நாய்கள் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என்று கால்நடை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

வால்பாறை காவல் துறை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

வால்பாறை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளாா். வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆனந்தகுமாா், ஈரோடு மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, த... மேலும் பார்க்க

வால்பாறை சாலக்குடி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதோடு வாகனங்களை வழிமறித்து வருகின்றன. வால்பாறை- கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி அருவி... மேலும் பார்க்க

கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்து இயக்கம்

கோவை தொண்டாமுத்தூா் அருகே பட்டியல் மற்றும் பழங்குடியின கிராமமான கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்துகள் செல்வதில்லை என புகாா் எழுந்த நிலையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணைய உத்தரவால் அப்... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை குனியமுத்தூா் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குனியமுத்தூா் போலீஸாா், பேரூா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் - சந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாள்களை முன்னிட்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்த்ராகாச்சிக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்க... மேலும் பார்க்க

கைப்பேசி செயலி மூலமாகப் பழகி பணம் பறித்த 15 போ் கைது: இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி, ஓரினச் சோ்க்கை ஆசையைத் தூண்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்கு... மேலும் பார்க்க