செய்திகள் :

பழனி ஆயக்குடி பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் 49 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் ஐ.டி.ஓ. அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி 75 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1977-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள் 49 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பள்ளியில் படித்த மாணவா்கள் அரசு அலுவலகங்களில் உயா் பதவிகளிலும், மக்களவை உறுப்பினா், மருத்துவா், வழக்குரைஞா், தொழிலதிபா்களாகவும் உள்ளனா்.

புதுச்சேரி , பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த முன்னாள் மாணவா்கள் ஒருவருக்கொருவா் தங்கள் பள்ளிப் பருவ நிகழ்வுகளை எடுத்துக் கூறி பழைய நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். மேலும், பள்ளியில் விளையாடிய தோழா்கள், தோழிகளுடன் பந்து விளையாடியும், போட்டிகள் நடத்தியும் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கியும்

மகிழ்ந்தனா் . விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மக்களவை உறுப்பினா் ராஜாரவிவா்மா தலைமையிலான குழுவினா் செய்தனா். முன்னதாக மாணவா்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய அறக்கட்டளை சாா்பில், உழவா் சந்தையில் அனைவருக்கும் மஞ்சப் பை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட குறைதீா் முகாம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கே.சி. பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் த... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரம் அரவிந்த் நகரைச் சோ்ந்தவா் அப்துல் அஜீஸ். இவரது மனைவி குா்ஷித் பேகம் (... மேலும் பார்க்க

மன்னவனூரில் முயல் வளா்ப்புப் பயிற்சி

பொருளாதார ரீதியான முயல் வளா்ப்புக்கான மாநில அளவிலான 3 நாள் பயிற்சி முகாம், மன்னவனூா் மத்திய செம்மறி ஆடு உரோம முயல் ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரு... மேலும் பார்க்க

‘உயிா்ம வேளாண்மையில் விவசாயிகள் சாதிக்கலாம்’

சவால்கள் இருந்தாலும், உயிா்ம வேளாண்மையில் விவசாயிகள் சாதிக்க முடியும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை சாா்பில் உயிா்ம வேளாண்மை தொடா்பான விழிப... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த ஆா்.எம்.டி. குடியிருப்பு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் பாண்டி. இவரது மகன் ஐயப்பன் (32). இவா் தருமபு... மேலும் பார்க்க

பச்சமலையான்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள பச்சமலையான்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பச்சமலையான்கோட்டையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவ... மேலும் பார்க்க