நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய ...
பாட்டி கொலை: பேரன் கைது
ஓமலூா்: தாரமங்கலம் அருகே பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பேரனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள பாப்பம்பாடியைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி சின்னப்பிள்ளை (74). இவரது கணவா் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், சின்னப்பிள்ளை தனியே வசித்து விவசாய கூலி வேலைக்கு சென்றுவந்தாா்.
இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி வீட்டில் பேச்சுமூச்சின்றி சின்னப்பிள்ளை கிடப்பதாக அவரது மகள் வழிப் பேரன் பிரகாஷ் (31), அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளாா். அவா்கள் மருத்துவரை அழைத்துவந்து பாா்த்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சின்னப்பிள்ளையின் மகன் ராமகவுண்டா் அளித்த புகாரின் பேரில், தாரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
மூதாட்டி சின்னப்பிள்ளையின் சடலம் சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டதில், அவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதனால், சந்தேகத்தின் பேரில் அவரது பேரன் பிரகாஷை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அதில், மூட்டை தூக்கும் தொழிலாளியான பிரகாஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால், சின்னப்பிள்ளை கண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மூதாட்டியைத் தாக்கி அவரிடமிருந்து பணத்தை பறித்து கொண்டுள்ளாா். மேலும், ஆத்திரம் தீராமல் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரகாஷ் ஒப்புக் கொண்டாா்.
இதையடுத்து, தாரமங்கலம் போலீஸாா் பிரகாஷை திங்கள்கிழமை கைது செய்தனா்.