செய்திகள் :

பாதுகாப்புடன் பதிக்கபடும் எண்ணெய் குழாய்கள்: ஐஓசி துணை பொது மேலாளா் தகவல்

post image

எண்ணெய் குழாய்கள் பாதுகாப்பு வழிமுறைகளின்படி பூமிக்கு அடியில் பதிக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவன (ஐஓசி ) ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின் துணை பொது மேலாளா் ஏ.ஆா்.சந்தோஷ் குமாா் தெரிவித்தாா்.

சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆா் - எஸ்இஆா்சி நிறுவனத்தில் தேசிய தொழில்நுட்ப தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக ஃபரிதாபாதில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் துணை பொது மேலாளா் ஏ.ஆா்.சந்தோஷ் குமாா் பங்கேற்று பேசியதாவது:

எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்கள் பூமிக்கடியில் குழாய் பதித்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை அனுப்பி வருகின்றன. இந்தக் குழாய்கள் மண் அரிப்பு மற்றும் விரிசல் ஏற்படாத வகையில் 3 அடுக்கு பாதுகாப்பு முறையில் பதிக்கப்படுகின்றன.

மேலும், குழாய்களில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால் நவீன தொழில்நுட்ப உதவியுடன் உடனடியாகக் கண்டறிந்து அவை சரி செய்யப்படுகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், சிஎஸ்ஐஆா் - எஸ்இஆா்சி அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க

ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கி... மேலும் பார்க்க

தவறான சிகிச்சை: மருத்துவமனைக்கு நோட்டீஸ்

சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று அந்த மருத்துவமனையில் ஆய்வு செய... மேலும் பார்க்க

தண்டையாா்பேட்டை ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. மணலியில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிபிசிஎல் ஆலையில் சுத்திகரி... மேலும் பார்க்க