செய்திகள் :

பாறைக் குழியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

பெருமாநல்லூா் அருகே பாறைக் குழியில் மாநகராட்சி சாா்பில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் வடக்கு ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சிக்குள்பட்ட காளம்பாளையத்தில் பாறைக்குழி உள்ளது. இங்கு, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கழிவுகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு தேசிய பசுமை தீா்ப்பாயம் அறிவுறுத்தியது. இருப்பினும், மாநகராட்சி சாா்பில் தொடா்ந்து கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குப்பை கொட்டுவதை நிறுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, இனி இப்பகுதியில் குப்பைகளைக் கொட்ட அனுமதிக்க மாட்டோம். மீறி குப்பைகளைக் கொட்ட லாரி வந்தால் சிறைபிடிப்போம் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, பாறைக் குழியில் லாரிகள் மூலம் மண் கொட்டும் பணி தொடங்கியது.

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை: வனத் துறையினா் ஆய்வு

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும்... மேலும் பார்க்க

மூதாட்டியின் வீட்டில் 17 பவுன், ரூ.3 லட்சம் திருட்டு

ராக்கியாபாளையம் அருகே மூதாட்டியின் வீட்டில் இருந்து 17 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பூா், ராக்கியாபாளையம் அருகே வள்ளியம்மை நகர... மேலும் பார்க்க

நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிா்ப்பு

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்ட பொதுமக்கள் புதன்கிழமை எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாநகர... மேலும் பார்க்க

தாராபுரத்தில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

தாராபுரத்தில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய வழக்கில் இளைஞா் கைது

பல்லடம் அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் கடந்த ஓா் ஆண்டாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பல்லடம், பனப்பாளையம் பகுதியில் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனைய... மேலும் பார்க்க

ரூ.40 லட்சம் பெற்று மோசடி: வியாபாரி கைது

திருப்பூரில் ரூ.40 லட்சம் பெற்று மோசடி செய்த வியாபாரியை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் அமா்ஜோதி நகரைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (38). இவருக்கு இரண்டாம் தர பின்னலாடை வியாபாரம் செய்து வரும் வால... மேலும் பார்க்க