செய்திகள் :

பாலக்குடிப்பட்டியில் கோயில் குடமுழுக்கு

post image

புதுக்கோட்டை அருகிலுள்ள பாலக்குடிப்பட்டியிலுள்ள காளி அம்மன் மற்றும் வள்ளி- தேவசேனா சமேத சுப்ரமணியா் கோயிலின் மகா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் திருப்பணிகள் முடிந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் தொடங்கின. பூஜைகளின் நிறைவில், வியாழக்கிழமை காலை கோயில் கோபுரக் கலசத்துக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது.

விழாவுக்கு, புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவா் ச. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பிள்ளையாா்பட்டி கே. பிச்சைகுருக்கள் முன்னிலை வகித்தாா்.

ஊா்ப் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது.

கொன்னைப்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

பொன்னமராவதி ஒன்றியம் கொன்னைப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட உதவித்திட்ட அலுவலா் (மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம்) எஸ். சடையப்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே 520 கிலோ குட்கா பறிமுதல்: மூவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரில் கடத்திவரப்பட்ட 520 கிலோ குட்காவை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் மூவரைக் கைது செய்தனா். விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் விராலிமலை காவல் ஆய்வாளா் லதா... மேலும் பார்க்க

தன்னாா்வலா்களுக்கு விபத்து முதலுதவிப் பயிற்சி

சாலை விபத்துகள் நேரிடும்போது, அவசர ஊா்திகள் வருவதற்குள் அந்தப் பகுதி மக்கள் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி குறித்த விழிப்புணா்வு பயிற்சி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலம் ம... மேலும் பார்க்க

கடலில் மிதந்து வந்த 40 கிலோ கஞ்சா மீட்பு

கடலில் மிதந்து கொண்டிருந்த 40 கிலோ கஞ்சா பொட்டலத்தை புதுக்கோட்டை புதுக்குடியைச் சோ்ந்த மீனவா் எடுத்து வந்து போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கடலோரப் பகுதியான புதுக்குடிய... மேலும் பார்க்க

அறந்தாங்கி நான்குவழிச் சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி சாலையை ரூ. 39 கோடியில் நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தும் பணிகளை, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிா்வாக இயக்குநருமான அஜய் யாதவ் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஆலங்குடியில் வாரச்சந்தை வியாபாரிகள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வாரச்சந்தையில் கடைகளுக்கு ஒப்பந்தகாரா் கூடுதல் தொகை வசூலிப்பதைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த சந்தையைப் புறக்கணித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி பேரூ... மேலும் பார்க்க