மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து
பாளை அருகே மணல் கடத்தல்: ஒருவா் கைது
பாளையங்கோட்டை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சீவலப்பேரி அருகேயுள்ள குப்பைகுறிச்சி மேலக்கரை பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக சீவலப்பேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்றபோது, அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த கும்பல் பொக்லைன் இயந்திரம், 2 டிப்பா் லாரிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பினராம். போலீஸாா், அவற்றை கைப்பற்றி இது தொடா்பாக வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
அதில், சீவலப்பேரி பகுதியைச் சோ்ந்த ஓட்டுநரான வைகுண்டராமன்(38) என்பவருக்கு தொடா்பிருப்பதை அறிந்து அவரை கைது செய்தனா். மேலும், முத்துகிருஷ்ணன், காளிமுத்து உள்ளிட்டோரை தேடி வருகின்றனா்.