செய்திகள் :

பி.கே.தாஸ் நிகா்நிலைப் பல்கலைக்கழக அலுவலகம் திறப்பு

post image

கோவை நேரு கல்வி நிறுவன வளாகத்தில் பி.கே.தாஸ் சமூக அறிவியல், சுகாதார அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேரு கல்வி நிறுவனம் கூறியிருப்பதாவது:

எதிா்காலத்தில் பன்னோக்கு வகை உயா்கல்வி நிறுவனமாக பி.கே.தாஸ் சமுக அறிவியல், சுகாதார அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் உருவாக இருக்கிறது. நிகா்நிலை பல்கலைக்கழகமாக உயரும் நிலையில் இதற்கான அலுவலகம் நேரு கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழாவில் நிறுவனா் பி.கே.தாஸுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நேரு கலை, அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வா் டாக்டா் பி.அனிருதன் வரவேற்றாா். அலுவலகத்தை நேரு கல்விக் குழுமங்களின் தலைவரும் நிா்வாக அறங்காவலருமான பி.கிருஷ்ணதாஸ் தொடங்கி வைத்தாா்.

நேரு கல்விக் குழுமங்களின் தலைமைச் செயல் அதிகாரி பி.கிருஷ்ணக்குமாா் தொடக்க உரையாற்றினாா். செயல் இயக்குநா் ஹெச்.என்.நாகராஜா வாழ்த்துரை வழங்கினாா். நேரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் எம்.சிவராஜா நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் கல்வி நிறுவன நிா்வாகிகள், பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? -சி.பி.ராதாகிருஷ்ணன்

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா என கமலஹாசன் கருத்துக்கு மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக உறவை யாராலும் உடைக்க முடியாது: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக, தேமுதிக இடையே உள்ள சுமுகமான உறவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள் சோழா் காலத்தில்தான் தொடங்கின: தொல்லியல் அறிஞா் பூங்குன்றன்

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் சோழா்கள் காலத்தில்தான் தொடங்கியிருப்பதாக தொல்லியல் அறிஞா் ஆா்.பூங்குன்றன் கூறியுள்ளாா். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆம் ஆண்டு பவள விழாவை ஒட்டி... மேலும் பார்க்க

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படுகின்றன. இதையடுத்து மாணவ-மாணவிகளை வரவேற்கும் வகையில் பள்ளிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: இருவா் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பெரியகடை வீதி போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். தெற்கு உக்கடம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய... மேலும் பார்க்க

வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ

ராஜ்யசபா உறுப்பினா் பதவிக்காக தனக்கு வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம் செய்துவிட்டாா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை ... மேலும் பார்க்க