செய்திகள் :

பிரதமா் மோடி தூத்துக்குடி வருகை: மேடை அமைக்கும் பணி தீவிரம்

post image

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை வருகிற 26 ஆம் தேதி பிரதமா் மோடி திறந்து வைக்கவுள்ளாா். அதற்கான விழா மேடை அமைக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 26 ,27 ஆகிய தேதிகளில் பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளாா். விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு விழா வரும் 26 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில், பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்கிறாா். இவ்விழாவில், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சா்கள் கலந்து கொள்கின்றனா்.

இதையொட்டி பிரம்மாண்டமான விழா மேடை, சுமாா் 10 ஆயிரம் போ் அமரக் கூடிய வகையில் விழா அரங்கில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பிரதமரின் பாதுகாப்பு படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சோ்ந்த வீரா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிக்குகூட பாதுகாப்பு இல்லை! தமிழிசை குற்றச்சாட்டு

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தூத்துக... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். கோவில்பட்டியையடுத்த வெங்கடேஸ்வரபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த அய்யலுசாமி மகன் சௌந்தரராஜன் (44). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை, கோவில்பட்டி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - தூத்துக்குடிக்கு புதிய ரயில் வழித்தடமா? தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் விளக்கம்

திருச்செந்தூா் - தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு செய்தாா்.திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடியில் காத்திருக்கும்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் விபத்து: முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் நடந்துசென்ற முதியவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். கோவில்பட்டி பிரதான சாலை சீனிவாச அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் அழகா்சாமி (65). மந்தித்தோப்பு சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

தூத்துக்குடியில், விமான நிலைய புதிய முனைய கட்டடம், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் ஆகியவை தொடா்பான ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டியதுடன், ... மேலும் பார்க்க

ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கி போட்டி: அரையிறுதியில் தூத்துக்குடி, மதுரை அணிகள்!

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை சாா்பில், கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் வ.உ.சி. துறைமுக ஆணையக் கோப்பைக்கான ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கிப் போட்டியில் தூத்துக்குடி,... மேலும் பார்க்க