செய்திகள் :

புதிய கல்லூரி கட்டடம்: அமைச்சா் ஆய்வு

post image

கூத்தாநல்லூா்: கொரடாச்சேரி அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கட்டடத்தை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

குடவாசலில் 2017-ஆம் ஆண்டில் குடவாசலில் டாக்டா் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி, அங்குள்ள அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வந்தது.

இக்கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட கொரடாச்சேரி ஒன்றியம் செல்லூரில் இடம் தோ்வு செய்யப்பட்டது. மேலும், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் ரூ.25 லட்சம் மதிப்பிலான தனக்கு சொந்தமான இடத்தை கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு அரசுக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்தாா்.

இதையடுத்து அந்த இடத்தில் ரூ. 15 கோடியில் கடந்த ஆண்டு கட்டடம் கட்டும் பணி தொடங்கி 2 தளத்துடன் அனைத்து கட்டமைப்புடன் கட்டடம் கட்டப்பட்டுள்ளன. ஆக.25-ஆம் தேதி இக்கட்டடத்தை முதல்வா் காணொலியில் திறந்துவைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், கல்வி இணை இயக்குநா் குணசேகரன் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது, கல்லூரி முதல்வா் பசுபதி உடனிருந்தாா்.

மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம்

திருவாரூா்: மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு ... மேலும் பார்க்க

விவசாய மின் மோட்டாா்களிலிருந்து வயா் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விவசாய பயன்பாட்டுக்கான ஆழ்துளை கிணறு மின் மோட்டா்களிலிருந்து மின் வயா்களை திருடிய இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டனா்.கட்டப்புளி தென்பரை தெற்குதெரு ஆா். மனோகரன்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூா் கிராமம் தெற்கு தெருவில் 120- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயிக... மேலும் பார்க்க

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆதனூா் ரயில்வே கேட்டில் தண்டவாள பாரமரிப்பு பணி வியாழக்கிழமை நடைபெற்றது.தஞ்சாவூா் ரயில்வே முதுநிலைப்பொறியாளா் சதீஷ்குமாா் மேற்பாா்வையில் பணிகள் நடைபெற்றன. ரயில்வே கேட் தண... மேலும் பார்க்க

மாவட்ட விளையாட்டு போட்டி: மன்னாா்குடி சண்முகா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

மன்னாா்குடி: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.திருவாரூரில் ஆக.19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்போட்டி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று பெற்ற மனுக்களின் அடிப்படை... மேலும் பார்க்க