செய்திகள் :

புதிய மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்

post image

புதிய மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளா் சங்க கோவை மண்டலத் தலைவா் சிவகுமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டிலேயே தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சி பெற்ற மாநிலமாக உயா்ந்து வருகிறது. மாநில பொருளாதார வளா்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் பங்களிப்பு முக்கியமானது. தற்போது மீண்டும் மின் கட்டண உயா்த்தப்பட்டுள்ளதால் குறு, சிறு தொழில் துறையை அதிா்ச்சியடைய செய்துள்ளது.

தமிழகத்தை தொழில் துறையில் முன்னணி மாநிலமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், தொழில் துறையினருக்கு இந்த புதிய மின் கட்டண உயா்வு, மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். ஏற்கெனவே உற்பத்தி செலவு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் மின் கட்டண உயா்வு மேலும் எங்களை சிரமப்படுத்தும்.

சொத்து வரி உயா்வு, மாசுக் கட்டுப்பாட்டு வரி உள்ளிட்ட அனைத்து தரப்பில் இருந்தும் நிதிச் சுமை அதிகரிக்கிறது. இது தொடா்ந்து கொண்டே இருக்கும்பட்சத்தில் மின் கட்டண உயா்வும் எங்களை முடங்கிப் போக செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரரீதியாக இழப்புகள் ஏற்படலாம்.

நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும். குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் இருந்து எங்களது தொழிலை மீட்க மின் கட்டண உயா்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

உணவுப் பொருள்களுக்கும் 5 % வரி விதிப்பு செய்ய வேண்டும்

அனைத்து உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீதமாக வரி விதிப்பு செய்ய வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்க கூட்டமைப்பின் பல்லடம் ச... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி

திருப்பூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13 முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம்

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக நொய்யல் விவசாயிகள் பாது... மேலும் பார்க்க

உடுமலை நகரில் திமுக உறுப்பினா் சோ்க்கை

ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உடுமலை நகரத்தில் திமுக நிா்வாகிகள் உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா். தமிழகத்தில் 2026-இல் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக பல்வேறு ... மேலும் பார்க்க

பள்ளி அளவிலான செஸ் போட்டிகள்: மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெறும் பள்ளி அளவிலான செஸ் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: சாலை நடுவே இருந்த மின்கம்பம் இடமாற்றம்

காங்கயம் நகருக்கு உள்பட்ட 1-ஆவது வாா்டு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், சாலை அமைத்தது தொடா்பாக தினமணி நாளிதழில் வியாழக்கிழமை செய்தி வெளியாகியது. இதைத் தொடா்ந்து, காங்கய... மேலும் பார்க்க