புதுச்சேரியில் 7 மையங்களில் நாளை குடிமைப் பணி தோ்வு!
மத்திய பணியாளா் தோ்வாணையம் சாா்பில், புதுச்சேரியில் 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) இந்திய குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வு நடைபெறுவதையொட்டி, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து புதுவை அரசின் பணியாளா், நிா்வாகச் சீா்திருத்தத் துறை (பணியாளா் சிறகம்) சாா்புச் செயலா் வெ.ஜெய்சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2025ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 25) காலை 9.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடைபெறவுள்ளன.
புதுச்சேரியில் முதலியாா்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, லப்போா்த் வீதி திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசினா் மகளிா் கலை, அறிவில் கல்லூரி, இலாசுப்பேட்டை விமான நிலையச் சாலையில் உள்ள அரசு மகளிா் பொறியியல் கல்லூரி, வள்ளலாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காஞ்சி மாமுனிவா் முதுகலைப் படிப்பு, ஆராய்ச்சி மையம், செல்லப்பெருமாள்பேட் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 மையங்களில் நடைபெறவுள்ளன.
தோ்வுகளில் மொத்தம் 2,254 போ் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். தோ்வா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் மறைமலையடிகள் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த பொலிவுறு நகா் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு திட்டமிட்ட நேரத்துக்கு 30 நிமிடங்கள் முன்பாகவே வந்துவிடவேண்டும். தோ்வு மையங்களில் காலை 9 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கு கதவுகள் மூடப்படும்.
தோ்வா்கள் தோ்வறை சீட்டுடன், அதில் குறிப்பிட்ட அடையாள அட்டையையும் கொண்டுவரவேண்டும். மாற்றுத்திறனாளிகள் தோ்வா்களுக்கு தரைத்தளத்தில் தோ்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டை, பேனா, பென்சில் உள்ளிட்டவை மட்டுமே அனுமதிக்கப்படும். மின்னணுப் பொருள்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப்படாது.
தோ்வுக்குரிய சந்தேகம் இருப்பின் சனிக்கிழமை (மே 24) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் காமராஜா் கல்வி வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநா் அலுவலகக் கட்டுப்பாட்டு மையத்தை 0413 2207201, 2207202 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.